மேலும் அறிய

தனியார் பள்ளியில் விபத்து; நேரில் சென்று எச்சரிக்கை விடுத்த எஸ்பி வருண்குமார்

பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த  எஸ்.பி வருண்குமார் உடனடியாக சரி செய்யவில்லை, என்றால் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திருச்சி மட்டுமல்லாது சுற்று வட்ட மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் வீட்டில் இருந்தும், அங்கு உள்ள விடுதியில் தங்கியும் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி ஒரு வகுப்பிற்கு மாதிரி தேர்வு நடைபெற்று வருவதால் 9ம் வகுப்பு மாணவர்களை வேறு ஒரு வகுப்பறையில் அமர வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வகுப்பறையில் இருந்த மேற்கூரை பெயர் விழுந்துள்ளது. அப்பொழுது மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் அந்த மின்விசிறியில் பட்டு தெறித்தது. இதில் துவாக்குடியை சேர்ந்த பாண்டி மகன் நிரஞ்சன் உட்பட 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடனே செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்  திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தனியார் பள்ளியில் விபத்து; நேரில் சென்று எச்சரிக்கை விடுத்த எஸ்பி வருண்குமார்

எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை

மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாவட்ட எஸ்பி வருண்குமார், வட்டாச்சியர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் நேரில் சென்று பார்த்த  எஸ்.பி வருண்குமார்,  இரண்டாம் தளம் முழுவதும் உள்ள வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற எந்த சம்பவங்களும் நடக்கக்கூடாது. பள்ளி நிர்வாகம் உடனடியாக அனைத்து வகுப்பறைகளையும் சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 

மேலும் 3 மாணவர்கள் காயம் அடைந்ததால் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அதிக அளவில் பள்ளி வளாகத்தில் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தனியார் பள்ளியில் விபத்து; நேரில் சென்று எச்சரிக்கை விடுத்த எஸ்பி வருண்குமார்

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கூறியது.. 

எங்கள் குழந்தைகள் போன்று இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இனிமேல் இது போன்ற எந்த சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு பள்ளி நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.

மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் முழுவதும் ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மைகள் மற்றும், மாணவ மாணவிகளின் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அவ்வபோது ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்கும். ஆகையால்  உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க  மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், பள்ளியில் விபத்து நடந்து சிறிது நேரத்திலே நேரில் வந்து ஆய்வு செய்து, பள்ளி நிர்வாகத்தை கண்டித்த எஸ்.பி வருண்குமார் அவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget