மேலும் அறிய

டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

ரோந்து செல்லமுடியாத இடங்களில் டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்திருந்தார். திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மாநகர காவல் அலுவலகத்தில் டி.ஜி.பி. ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனை பேணிக்காத்து, ரோந்து பணி மேற்கொண்டு, குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்கள் மீது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும். தற்போது காவல் துறையில் நவீனமயமாக்கப்பட்ட பல சேவைகள் செயலில் உள்ளது. அதை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அதிகமாக விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்கள் ஆகியற்றை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். ரோந்து செல்லமுடியாத இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டறிய டிரோன் கேமரா மூலம் கண்காணித்து குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 
 

டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு
முன்னதாக, திருச்சி மாநகர் மற்றும் திருச்சி சரகத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கையிலும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர கமிஷனர் சத்தியபிரியா, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாநகர துணை கமிஷனர்கள், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
 
இதைத்தொடர்ந்து திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையத்தை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசும்போது, எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓட்டுனர் இல்லாமல் பஸ், ரயில், விமானம் ஓடும் நிலைமை ஏற்படும். கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போலீஸ் இல்லாமல் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இதன் காரணமாக பல துறையை சேர்ந்தவர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு என்.ஐ.டி. இயக்குனர் (பொறுப்பு) ராம்கல்யாண் தலைமை தாங்கினார். இதில் என்.ஐ.டி.பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget