மேலும் அறிய

திருச்சியில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்

திருச்சியில் தீபாவளி பட்டாசால் ஒலி மாசு அதிகரித்துள்ளது, மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளிக்கு முன் மற்றும் பின்பு 7 நாட்களுக்கு என் 14 நாட்களுக்கு காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது. அதன்படி, ஒலி மாசுபாடு அளவு தீபாவளிக்கு முன்பாக 18-ந்தேதியும், தீபாவளி பண்டிகையன்று தில்லைநகர் பகுதியில் எடுக்கப்பட்டது. 18-ந்தேதி தில்லைநகரில் ஒலி மாசு குறைந்தபட்சம் 57.5 டெசிபலும், அதிகபட்சமாக 69 டெசிபலும் கண்டறியப்பட்டது. தீபாவளியன்று தில்லைநகரில், குறைந்தபட்சம் 65.1 டெசிபலும், அதிகபட்சமாக 87.4 டெசிபலும் அளவிடப்பட்டது. இந்த அளவிடப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளியன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை (பகல்-65 டெசிபல், இரவு-55 டெசிபல்) விட அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. தீபாவளியன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு குறித்து காலை 6 மணி முதல் மறுநாளான 25-ந்தேதி காலை 6 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காற்றுத்தர குறியீடு, 46-ல் இருந்து (மாசுபடாதது) 130 வரை (மிதமான மாசுபட்டது) என்று கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக உறையூரில் 111-ம், தென்னூரில் 130-ம் கண்டறியப்பட்டது. மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அன்று காற்றில் ஏற்பட்ட அதிகமான ஈரத்தன்மையும், காற்றின் மிகக்குறைந்த வேகமும் பட்டாசு வெடித்ததனால் ஏற்படும் புகை வான்வெளியில் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படவில்லை.


திருச்சியில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்

மேலும் இதுவே திருச்சி மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு இந்தாண்டு தீபாவளியன்று சற்று அதிகமானதற்கு காரணமாகும். வரும் காலங்களில் பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீபாவளி பண்டிகையின் போது பின்பற்றி காற்றின் தரம் மற்றும் ஒலி மாசு அளவுமிகாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருச்சி இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், தீபாவளி அல்லது அதற்கு முன் நகரில் மிதமான மழை பெய்து, காற்றின் தரத்தை மேம்படுத்தியது. இந்த ஆண்டு, பட்டாசுகளின் புகையை வெளியேற்றுவதற்கு வானிலை உகந்ததாக இல்லை என்று TNPCB மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிக அளவில் உயர் ரக பட்டாசுகளை வெடிப்பது, குறிப்பாக வான்வழி பட்டாசுகளை வெடிப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இனிமேல் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும் , இல்லை என்றால் காற்று, ஒலி மாசு ஏற்பட்டால் பாதிப்பு இயற்கைக்கு மட்டும் இல்லை, நமக்கும் தான் என அனைவரும் உணரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget