மேலும் அறிய

திருமண வீட்டில் 121 நகைகள் கொள்ளை: 2 இலங்கை தமிழர்கள் உள்பட 3 பேர் கைது; சிக்கியது எப்படி?

புதுக்கோட்டையில் திருமண வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் 2 இலங்கை தமிழர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 61 பவுனை தங்க கட்டிகளாக மீட்பு.

புதுக்கோட்டை மாவட்டம்  பெரியார் நகரை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 67). இவரது மகள் வெண்ணிலாவுக்கு கடந்த மார்ச் மாதம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி இரவு அவரது வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 121 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், மாரிமுத்து, காமராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. திருமண வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெண்ணிலாவின் சகோதரர் கனடாவில் டாக்டராக பணியாற்றி வருகிற நிலையில் அவரும் திருமணத்திற்காக வந்திருந்தார்.
 

திருமண வீட்டில்  121 நகைகள் கொள்ளை: 2 இலங்கை தமிழர்கள் உள்பட 3 பேர் கைது; சிக்கியது எப்படி?
 
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மதுரை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜன் (46), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (34), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ் என்கிற ஸ்டீபன் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 61 பவுன் நகைகளை தங்க கட்டிகளாக மீட்டனர். கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியது..  சிவராஜன், சதீஷ் ஆகிய இருவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீடு எடுத்து தங்கி ஆங்காங்கே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இவர்கள் இரண்டு பேருக்கும் தங்கபாண்டி நண்பர் ஆவார். இவர்களுக்குள் பழக்கம் சிறையில் இருக்கும் போது ஏற்பட்டிருக்கிறது. 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கைதான 3 பேரும் சம்பவத்தன்று திருமணத்திற்காக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கின்றனர்.
 

திருமண வீட்டில்  121 நகைகள் கொள்ளை: 2 இலங்கை தமிழர்கள் உள்பட 3 பேர் கைது; சிக்கியது எப்படி?
 
இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் இவர்கள் பயன்படுத்திய கார் மூலம் விசாரணையில் துப்பு துலங்கியது. மேலும் செல்போன் சிக்னல் டவரில் பதிவான எண்களை வைத்தும் விசாரித்ததிலும் 3 பேர் பற்றி தெரியவந்தது. கைதான 3 பேரும் நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த நகைகளில் 10 பவுன் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த நகைகளும் மீட்கப்படும். கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget