மேலும் அறிய

திருச்சி : இறந்தும், உறுப்பு தானம் வழியாய் 5 பேர்களுக்கு வாழ்வு கொடுத்த இளைஞர்.. கொண்டாடும் மக்கள்

திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புதானம் செய்து 5 பேர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரை சேர்ந்தவர் சின்னப்பன், கூலித்தொழிலாளி. இவரது இளைய மகன் முருகேசன் (வயது 27). லோடு ஆட்டோ டிரைவர். கடந்த, 1ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் விலாப்பட்டி அருகே இவர் லோடு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த முருகேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேற்சிகிச்சைக்காக, திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதித்தனர். அப்போது முருகேசன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதையடுத்து முருகேசனின் உறவினர்களிடம் மருத்துவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துக்கூறி அரசு விதிகளின்படி உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு உறவினர்களிடம் சம்மதம் பெற்றனர்.


திருச்சி : இறந்தும், உறுப்பு தானம் வழியாய் 5 பேர்களுக்கு வாழ்வு கொடுத்த இளைஞர்.. கொண்டாடும் மக்கள்

கடந்த 8 ஆம் தேதி இரவு  9 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை, விடியற்காலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதில், முருகேசனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாக பெறப்பட்டன. திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் முருகேசனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், முருகேசனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களிடம் பேசியபோது, ”திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என தெரிவித்தார். மேலும் கடந்த மாதம் இதேபோல் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்பு தானம் செய்யபட்டு 3 பேர்களுக்கு பொருத்தபட்டுள்ளது” என்றார்.


திருச்சி : இறந்தும், உறுப்பு தானம் வழியாய் 5 பேர்களுக்கு வாழ்வு கொடுத்த இளைஞர்.. கொண்டாடும் மக்கள்

மேலும் ஒரு கல்லீரல், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, முழு மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் இன்று காலை கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். எனவே பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெற்று, அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும்  என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Embed widget