மேலும் அறிய

அரியலூர் : குடிநீர் வராததை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சியின் 8-வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல்நிலை ஊராட்சியின் 8-வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை எனவும், மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அப்பகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
 
இதையொட்டி தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் இருந்து 8-வது வார்டு பொதுமக்கள் கையில் காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து ஒன்றிய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்து ஒன்றிய அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்வேல் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

அரியலூர் : குடிநீர் வராததை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..
 
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்கள் திடீரென ஒன்றிய அலுவலக வளாக முன்கதவை திறந்து கொண்டு காவல்துறையை மீறி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் ஒரு காவல்துறையினர்  மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், திடீரென ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போராட்டக்காரர்களை மீண்டும் ஒன்றிய அலுவலக முகப்புப் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
 
அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு எப்போது குடிநீர் கொடுக்கப்படும் என்பது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் தங்களோடு பேசி தகுந்த பதிலை தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு ஊராட்சி தலைவர் கதிர்வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
 

அரியலூர் : குடிநீர் வராததை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..
 
இதற்கிடையே வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சிகள்) ஜெயராஜ் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக ஒன்றிய அலுவலகத்திற்கு திரும்பினார். மேலும் 8-வது வார்டு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அப்பகுதி மக்களுக்கு தற்காலிக தீர்வாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்களிடம் அவர் தெரிவித்தார். அப்பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget