மேலும் அறிய

பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

விபத்துகளை தவிா்க்க சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் - பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகையால் காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றினால் விபத்துக்கள் நடப்பதை முற்றிலும் தடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும், அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும்.


பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசியது

போதைப் பொருள்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை குறைத்து, மூளையைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் அதிலிருந்து விலகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மேலும், சாலைகளில் பயணிக்கும்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டினால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் சீட்பெல்ட் அணிந்து பயணித்தால் எதிா்பாராத விபத்துகள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதும் தவிா்க்கப்படும். 

பெரம்பலூரை போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்டக் காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். 

தொடா்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைத்தாா் ஆதா்ஷ் பசேரா.

கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், காவல்துறையினா் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தலைப்பு செய்திகள்

GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget