மேலும் அறிய

பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

விபத்துகளை தவிா்க்க சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் - பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகையால் காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றினால் விபத்துக்கள் நடப்பதை முற்றிலும் தடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும், அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும்.


பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசியது

போதைப் பொருள்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை குறைத்து, மூளையைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் அதிலிருந்து விலகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மேலும், சாலைகளில் பயணிக்கும்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டினால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் சீட்பெல்ட் அணிந்து பயணித்தால் எதிா்பாராத விபத்துகள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதும் தவிா்க்கப்படும். 

பெரம்பலூரை போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்டக் காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். 

தொடா்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைத்தாா் ஆதா்ஷ் பசேரா.

கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், காவல்துறையினா் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
Embed widget