மேலும் அறிய

மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி சேர்ந்த திருநங்கை ரியானா

இம்மாதம் டிசம்பரில் டெல்லியில் நடைபெறயுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் திருச்சி திருநங்கை ரியானா பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். தற்போது தான் திருநங்கைகளுக்கான முக்கியத்துவத்தை இந்த அரசும் அளிப்பதால் அவர்கள் தங்களை இந்த சமூகத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திருநங்கைகளில் ஒரு சிலர் அவர்களுக்கான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணித்தாலும் , பலர் அதற்கான தேடுதலை தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் ஒருவரான ரியானா வயது (26). என்ற மூன்றாம் பாலினத்தவரை சந்தித்து போது...  திருச்சியில் கல்லுக்குளியில் பிறந்து, வளர்ந்து பள்ளி படிப்பை ஆர். சி.  மேல்நிலைப் பள்ளியில் பயின்று முடித்தேன் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், பள்ளி படிப்புடன் நிறுத்தி விடாமல் புனித வளனார் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் படித்து, ஜமால் முகமது கல்லூரியில் எம்.எஸ்.சி இயற்பியல் படித்துள்ளார். தற்போது திருநங்கைகளின் வளர்ச்சிக்காக செயல்படும் லீடூ என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டே கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து மாடலிங்கல் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் நடனத்தில் டிப்ளமோ படித்துள்ளார். அவ்வப்போது நடன பயிற்சி அளிப்பதும், குறும்படம் போன்று தன்னுடைய கேரியரை முன்னோக்கி நகர்த்தி வருகிறார். 


மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி சேர்ந்த திருநங்கை ரியானா

மேலும் அவருடைய மாடலிங் குறித்து பேசுகையில்...  "கடந்த 2022 ஏப்ரல் 18 ஆம்  தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் பங்கேற்று முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்டேன். இங்கு  மாடலிங் புதிய ரக ஆடைகள், ஆபரணங்கள், சிகை அலங்காரம், என்று பலவிதமான தோற்றங்களில் மேடைகளில் கேட் வாக்கில் நடந்து வந்து, தங்களுடைய அலங்காரங்களை பார்வையாளர்களை பார்க்க வைப்பது. இப்படி தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளேன். இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள், அனைவரையும் அவர்களுடைய முந்தைய சாதனைகள், அவர்களுடைய மாடலிங் அனுபவம், உள்ளிட்டவற்றை இணையதள மூலம் டெல்லியில் இருந்து, ஒரு குழு ஆய்வு செய்து அதன் பின் அவர்களை தேர்வு செய்வார்கள்.  அதில் தமிழகத்தில் இருந்து நான் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அதற்கான ஆடிசன் நிகழ்ச்சியும் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்து விட்டது.  இந்த மாதம் டிசம்பர் டெல்லியில் மிஸ் இந்தியா போட்டியானது நடைபெற உள்ளது .


மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி சேர்ந்த திருநங்கை ரியானா

இந்த போட்டியில்  வெற்றி பெறுவது தான் என்னுடைய இலக்கு என்று கூறினார். இன்றைய சூழ்நிலையில் என்னை போல் இருக்கும் அநேக திருநங்கைகள் தங்களுடைய பெற்றோர்கள், ஆதரவு இல்லாதது  காரணமாக வழி விலகி போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களின் ஆதரவு என்பது கட்டாயம் தேவை, என்பதை என்னை போன்ற திருநங்கைகளின் பெற்றோர்கள் உணர வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் தரும் அன்பும், அரவணைப்பும், தான் நான் இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன். என்னுடைய வீட்டில் பெற்றோர் மட்டுமல்லாமல் என்னுடைய அண்ணன், அண்ணி மற்றும் உறவினர்கள் அனைவரும் என்னை ஆதரித்து அன்பு காட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். என்னுடைய வாழ்வில் இலக்கு என்னை போன்றவர்களை அரவணைத்து அவர்களை மேம்படுத்துவது தான்" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget