மேலும் அறிய

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அமைக்க 460 கோடியில் திட்ட அறிக்கை தயார்...!

’’புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட 460 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்ட அறிக்கையை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்’’

திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த  பேருந்து நிலைய திட்டம் ஆகும். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக  460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்வரைவு திட்டம், சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புதிய பேருந்து நிலையம், திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் பகுதியில் 115.68 ஏக்கர் பரப்பளவில் அமைக்க இடம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் பக்கத்திலேயே, சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது. பஞ்சப்பூர் பகுதியில் 575 ஏக்கர் பரப்பளவிற்கு நிலம் இருப்பதாக தெரிவித்து உள்ள அதிகாரிகள், திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கே. சாத்தனூர் மற்றும் பிரட்டியூர் (கிழக்கு) கிராமங்களை சேர்ந்த பகுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அமைக்க 460 கோடியில் திட்ட அறிக்கை தயார்...!

புதிதாக அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், நகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் என தனித்தனியாக அமைக்கப்பட உள்ளதாகவும்,  சரக்கு முனையம் என்பது, திருச்சி மக்களின் நீண்டநாள் கனவாக உள்ளது, எனவே இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்தின் கீழ், சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது. திருச்சி–புதுக்கோட்டை, திருச்சி–திண்டுக்கல் மற்றும் திருச்சி சென்னை வழித்தடங்கள் எளிதில் அணுகக் கூடிய பகுதியாக இது உள்ளது. சரக்கு முனையத்தை அமைக்க, உள்ளாட்சி நிர்வாகம் இதை சிறந்த இடமாக அங்கீகரித்து உள்ளது. மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் லாரிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாது, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 2,245 பேருந்துகளும், 7,975 பேருந்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள மத்திய பேருந்து நிலையத்தை நாள்தோறும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2006ஆம் ஆண்டிற்கு பிறகு, இடப்பற்றாக்குறை காரணமாக இது மேம்படுத்தப்படவே இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அமைக்க 460 கோடியில் திட்ட அறிக்கை தயார்...!

இதனை தொடர்ந்து விரைவில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் வணிக வளாகங்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள், தேவையான அளவிற்கு பேருந்து பாதைகள் மட்டுமல்லாது, எரிபொருள் நிலையம், குளிர்சாதன பொருட்கள் கிட்டங்கி வசதியுடன் கூடிய சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது எனவும்,  திருச்சி மக்கள் தொகை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 11.45 சதவீதம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது. பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள நிலையில், அங்கு காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்திற்காக, 460 கோடி ரூபாய் முதற்கட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் மிக அதிக மதிப்பிலான திட்டம் இது ஆகும். இந்த பேருந்து முனைய பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையிலான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Embed widget