மேலும் அறிய

புதுக்கோட்டையில் ரத்தகாயங்களுடன் ஒருவர் பிணமாக மீட்பு - பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட மோதல் காரணமா?

புதுக்கோட்டையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் பழனியப்பா கார்னர் பகுதி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும். இந்த நிலையில் பழனியப்பா கார்னர் அருகே நேற்று காலை 6 மணி அளவில் பொது மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் வணிக நிறுவன கடை முன்பு ரத்த காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் கயிறு ஒன்று இறுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் வலது கண்ணில் காயமும், வலது கையில் ரத்த காயமும், ரத்தம் வடிந்த நிலையிலும் இருந்தது. அந்த உடல் அருகே உணவு பொட்டலம் ஒன்றும், ரூபாய் நோட்டுகள், சில்லறைகள் ஒரு பாலித்தீன் பையில் வைத்த நிலையில் இருந்தது. மேலும் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்த நபர் குறித்து அப்பகுதியினர் டவுன் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்க்கு  டவுன் துணை காவல் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
 

புதுக்கோட்டையில் ரத்தகாயங்களுடன் ஒருவர் பிணமாக மீட்பு - பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட மோதல் காரணமா?
 
இதனை தொடர்ந்து பிணமாக கிடந்த நபர் பற்றி விசாரணை நடத்தியதில் அவர் புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியை சேர்ந்த சரவணன் (40) என தெரிய வந்தது. அவர் கூலிவேலைக்கு சென்று வந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், குடும்பத்தை பிரிந்து வசிப்பதும் தெரிய வந்தது.  இந்த நிலையில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள திரையரங்கத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. திரையரங்கத்துக்கு வந்த ரசிகர்களுடன் மோதல் அல்லது வாக்குவாதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? எனவும் காவல்துறையினர்  விசாரித்தனர். இதற்கிடையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் அருகில் உள்ள ஒரு டீக்கடைக்குள் புகுந்து பின் வெளியே வந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இறந்தவரின் உடல் அப்புறப்படுத்தப்படாமல் காலை 9 மணிக்கு மேல் வரையும் அதே இடத்தில் கிடந்தது. இதனால் பரபரப்பான காலை நேரத்தில் அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.  மேலும் பிணம் கிடந்த இடத்தின் அருகே இருந்த கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கணினியில் பார்வையிட்டனர்.
 

புதுக்கோட்டையில் ரத்தகாயங்களுடன் ஒருவர் பிணமாக மீட்பு - பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட மோதல் காரணமா?
 
இதில் சரவணன் நேற்று முன்தினம் பகல் 1.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அதே இடத்தில் குடிபோதையில் கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரை எழுப்புவதற்காக ஒருவர் வந்து சென்றதும் பதிவாகி இருந்தது. குடிபோதையில் அருகில் உள்ள பதாகையில் அவர் கைகளால் தாக்கியதில் ரத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை கூறினர். மேலும் இறந்த சரவணின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின் அதில் உள்ள அறிக்கை குறித்து காவல்துறை கூறுகையில், சரவணனின் கழுத்தில் கிடந்தது கயிறு அல்ல. அவர் அணிந்திருந்த டிராக் சூட்டில் உள்ள கயிறாகும். பிரேத பரிசோதனையில் அவர் இறந்தது இயற்கை மரணம் என தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது சாவு இயற்கை மரணம் என காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget