மேலும் அறிய

மத்திய மண்டலத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் காட்டு மக்கள்

திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆனால் 12 சதவீத பேர்கள் மட்டுமே 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

மத்திய மண்டலத்தை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை  சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட அதிகாரிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 12 சதவீத பேர் 2 தவணையும் செலுத்தி விட்டனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 12 ஆம்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் ஒரு நாளில் மட்டும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை 3 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.86 லட்சம் பேர், முன்களப் பணியாளர்கள் 11.89 லட்சம் பேர், 18-44 வயது உள்ளவர்கள் 1.89 கோடி பேர், 45-60 வயது உள்ளவர்கள் 1.20 கோடி பேர், 60 வயதுக்கு மேல் 55.26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.


 இதன்படி பார்த்தால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள பொதுமக்களில் 52 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 15 சதவீத பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். திருச்சியில் 14,91,503 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 11,63,524 பேர் முதல் தவணையும், 3,27,979 பேர் 2 தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 4,29,850 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,20,549 பேர் முதல் தவணையும், 1,09,301 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் 4,62,926 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 3,88,036 பேர் முதல் தவணையும், 74,890 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 3,75,473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,05,041 பேர் முதல் தவணையும், 70,432 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். கரூரில் 4,86,995 பேர் முதல் தவணையும், 1,21,253 பேர் இரண்டு தவணை என்று மொத்தம் 9,03,245 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெரம்பலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 3,02,795 பேரில், 2,46,043 பேர் முதல் தவணையும், 56,752 பேர் 2வது தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.


மத்திய மண்டலத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் காட்டு மக்கள்

தஞ்சையில் 11,35,631 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 9,18,992 பேர் முதல் தவணையும், 2,16,639 பேர் 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். திருவாரூரில் 6,09,317 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 5,05,684 பேர் முதல் தவணையும், 1,03,633 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். நாகையில் 4,07,702 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 3,28,978 பேர் முதல் தவணையும், 78,101 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். மயிலாடுதுறையில் தற்போது வரை 3,71,983 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,09,188 பேருக்கு முதல் தவணையும், 62,795 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். கொரோனா தொற்றில்  இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதை தீவிரப்படுத்தி உள்ளது, ஆனால் மக்கள் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் தயக்கம் காட்டாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டினால் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget