மேலும் அறிய

மத்திய மண்டலத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் காட்டு மக்கள்

திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆனால் 12 சதவீத பேர்கள் மட்டுமே 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

மத்திய மண்டலத்தை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை  சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட அதிகாரிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 12 சதவீத பேர் 2 தவணையும் செலுத்தி விட்டனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 12 ஆம்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் ஒரு நாளில் மட்டும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை 3 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.86 லட்சம் பேர், முன்களப் பணியாளர்கள் 11.89 லட்சம் பேர், 18-44 வயது உள்ளவர்கள் 1.89 கோடி பேர், 45-60 வயது உள்ளவர்கள் 1.20 கோடி பேர், 60 வயதுக்கு மேல் 55.26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.


 இதன்படி பார்த்தால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள பொதுமக்களில் 52 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 15 சதவீத பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். திருச்சியில் 14,91,503 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 11,63,524 பேர் முதல் தவணையும், 3,27,979 பேர் 2 தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 4,29,850 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,20,549 பேர் முதல் தவணையும், 1,09,301 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் 4,62,926 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 3,88,036 பேர் முதல் தவணையும், 74,890 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 3,75,473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,05,041 பேர் முதல் தவணையும், 70,432 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். கரூரில் 4,86,995 பேர் முதல் தவணையும், 1,21,253 பேர் இரண்டு தவணை என்று மொத்தம் 9,03,245 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெரம்பலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 3,02,795 பேரில், 2,46,043 பேர் முதல் தவணையும், 56,752 பேர் 2வது தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.


மத்திய மண்டலத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் காட்டு மக்கள்

தஞ்சையில் 11,35,631 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 9,18,992 பேர் முதல் தவணையும், 2,16,639 பேர் 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். திருவாரூரில் 6,09,317 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 5,05,684 பேர் முதல் தவணையும், 1,03,633 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். நாகையில் 4,07,702 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 3,28,978 பேர் முதல் தவணையும், 78,101 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். மயிலாடுதுறையில் தற்போது வரை 3,71,983 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,09,188 பேருக்கு முதல் தவணையும், 62,795 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். கொரோனா தொற்றில்  இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதை தீவிரப்படுத்தி உள்ளது, ஆனால் மக்கள் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் தயக்கம் காட்டாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டினால் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
CHN Corp. Super Plan: மாடுகளுக்கு மைக்ரோ சிப்... நவீன மாட்டு கொட்டகை... சென்னை மாநகராட்சியின் செம்ம பிளான்...
மாடுகளுக்கு மைக்ரோ சிப்... நவீன மாட்டு கொட்டகை... சென்னை மாநகராட்சியின் செம்ம பிளான்...
Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trump Request Elon Musk | ”சுனிதாவை காப்பாத்துங்க..”உதவி கேட்ட ட்ரம்ப் உடனே இறங்கிய எலான் மஸ்க் | Sunita WilliamsVijay Aadhav Arjuna: 2026-க்கு பக்கா ஸ்கெட்ச்.. விஜயுடன் ஆதவ் அர்ஜூனா! ப்ளான் என்ன?TVK Vijay Order : ”பணம் இருந்தா பதவியா?” குமுறிய TVK நிர்வாகிகள்! விஜய் போட்ட Order!Edappadi Palanisamy: OPERATION செந்தில் பாலாஜி  ஆட்டத்தை ஆரம்பித்த EPS  ஆதவ் MASTERMIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
CHN Corp. Super Plan: மாடுகளுக்கு மைக்ரோ சிப்... நவீன மாட்டு கொட்டகை... சென்னை மாநகராட்சியின் செம்ம பிளான்...
மாடுகளுக்கு மைக்ரோ சிப்... நவீன மாட்டு கொட்டகை... சென்னை மாநகராட்சியின் செம்ம பிளான்...
Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
Embed widget