மேலும் அறிய

Farmers: டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் - விவசாயிகள் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு திமுக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு..

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின்  மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த  கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தலைவர் பூரா. விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பொய்த்து விட்டது. அதனால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 


Farmers: டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் - விவசாயிகள் அதிரடி அறிவிப்பு

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் ஷேல் கேஸ் ஆகியன எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. காவிரி கொள்ளிடம் ஆறுகளில் 30 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், புழு தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடனில் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் கரும்பு, நெல், நிலக்கடலை போன்றவற்றுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு 50% மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு அந்த சட்டத்தை வாபஸ் பெறுவதோடு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21 ஆம் தேதி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுகவும் திமுகவும் விவசாயிகள் ஓட்டுக்களை பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு பல திட்டங்களை அறிவித்தனர். அதன்பின் விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதோடு விவசாயிகளுக்கான திட்டங்களை காலம் தாழ்த்தி அறிவித்து பயன்பெற முடியாமல் செய்து விடுகின்றனர் என தெரிவித்தார்.


Farmers: டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் - விவசாயிகள் அதிரடி அறிவிப்பு

திமுக அரசு தமிழ்நாட்டில் பதவி ஏற்பதற்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை. விவசாயிகளின் விலைப் பொருளுக்கு உரிய விலையை இதுவரை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது தான் அரசின் சாதனையாக உள்ளது. தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனை காப்பதற்கு திமுக அரசு முன் நின்று அனைத்து திட்டங்களையும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதத்தை காப்பதற்காக தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இன்னமும் விவசாயிகள் மத்தியில் உள்ளது என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget