மேலும் அறிய

மூன்றாவது அலையை எதிர்கொள்ள திருச்சியில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார்...!

திருச்சி மண்டலத்தில் 6,289 ஆக்சிஜன் படுக்கைகளை தயார் செய்து திரவ ஆக்சிஜன் வழங்கும் பணிக்கான நடைமுறைகளை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தொடங்கியுள்ளது.

திருச்சி மத்திய மண்டலத்தில் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 65 வட்டார மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தடையில்லாமல் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி கொரோனா தொற்று 1800 என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வந்தால் அதை எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 43,902 ஆக்சிஜன் படுக்கைகள், 27,343 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள், 9088 ஐசியூ படுக்கைகள் என்று மொத்தம் 80 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. இதைத்தவிர்த்து கோவிட் கேர் மையங்களில் 55,009 படுக்கைகளும் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.


மூன்றாவது அலையை எதிர்கொள்ள திருச்சியில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார்...!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் படுக்கையின் தேவை அதிகரித்த நிலையில் படுக்கையின் தேவையும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி பொதுப்பணித்துறையின் மருத்துவ சேவைகள் பிரிவு மூலம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 319 வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்பட்டது. இதில் குறிப்பாக மத்திய மண்டலத்தில் உள்ள 65 மருத்துமனைகளில் ஆக்சிஜன் வசதியும் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் 11, தஞ்சாவூரில் 14, திருவாரூரில் 8, புதுக்கோட்டையில் 14, அரியலூரில் 3, பெரம்பலூரில் 4, மயிலாடுதுறையில் 5, நாகையில் 6 என்று மொத்தம் 65 வட்டார மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.


மூன்றாவது அலையை எதிர்கொள்ள திருச்சியில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார்...!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, மண்ணச்சநல்லூர், தொட்டியம், துறையூர் உள்ளிட்ட 11 மருத்துவமனைகளில் 904 படுக்கை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுபள்ளி, திருவிடைமருதூர், அதிகராம்பட்டினர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 14 மருத்துமனைகளில் 1463 படுக்கைகள், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், நீடாமங்கலம் உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் 732 படுக்கைகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட 14 மருத்துவமனைகளில் 950 படுக்கைகள், அரியலூரில் ஜெயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம் மருத்துவமனைகளில் 278 படுக்கைகள், பெரம்பலூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், வேப்பூர் உள்ளிட்ட 4 மருத்துவமனைகளில் 669 படுக்கைகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், சீர்காழி உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் 100 படுக்கைகள், நாகை மாவட்டத்தில் நாகூர், பொறையாறு உள்ளிட்ட 6 மருத்துவனைகளில் 243 படுக்கைகள் என்று மொத்தம் 6,289 படுக்கைள் தயார் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் வழங்கும் பணிக்கான நடைமுறைகளை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தொடங்கியுள்ளது. நேரடியாக இந்த மருத்துவமனைகளுக்கு சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget