செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
Paranur and Athur toll plaza charges : சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல பரணூர் டோல் கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் இந்த டோல் கேட் கட்டணம் அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து வசதி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேகமாக குறிப்பிட்ட இடத்தை சென்று சேர்வதற்காக சாலைகளும் புதிய வசதிகளோடு அமைக்கப்பட்டு வருகிறது. எனவே சாலைகளை பராமரிக்கும் வகையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையே கட்டணமானது வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 78 டோல் பிளாசா உள்ளது. இதில் சுமார் 72 டோல் பிளாசாக்கள் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு சில டோல் பிளாசா மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்ட்டு வருகிறது.
டோல் பிளாசா கட்டணம் என்ன.?
அந்த வகையில் டோல் கட்டணம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 2 முறை உயர்த்தி வசூலிக்கப்படும். இதன் படி ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் புதிய கட்டணமானது வசூலிக்கப்படும், அந்த வகையில் ஒவ்வொரு முறையும் 3 முதல் 12 சதவிகித அளவிற்கு கட்டண உயர்வு இருக்கும். இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியே சென்றதும் உடனடியாக வரும் முதல் டோல் பிளாசா பரணூர் டோல் பிளாசா தான். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பரணூர் டோல் பிளாசா கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு அருகிலுள்ள பரணூர் டோல் பிளாசாவில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண விவரம்
- கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.75
- லைட் கமெர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.120
- லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்களுக்கு ரூ.250
- கனரக வாகனங்களுக்கு ரூ.275 முதல் ரூ.480 வரை கட்டணம் நிர்ணயம்
கட்டண சலுகை அறிவிப்பு
- அனைத்து வகை ஊர்திகளுக்கும் பணம் செலுத்தியதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் (25% தள்ளுபடி)
- அனைத்து வகை ஊர்திகளுக்கும் கட்டணம் செலுத்திய நாளிலிருந்து ஒரு மாதத்தில் 50 ஒருமுறை பயணிக்க கட்டணம் (33% தள்ளுபடி)
- சுங்கச் சாவடியில் இருந்து 20 கிமீ-க்குள் வாழும், வணிகம் அல்லாத ஊர்திகளுக்கு ஒரு காலாண்டர் மாதத்திற்கு, ரூ.350 என்ற கட்டணத்தில் பாஸ்
- சுங்கச் சாவடி இருக்கும் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வணிக ஊர்தி (தேசிய அனுமதியின் கீழ் இயங்குபவர்கள் தவிர்த்து) (தள்ளுபடி 50%)
- ஆண்டு பாஸ் 'Rajmarg Yatra App' என்ற பயன்பாடு மூலம், ரூ. 3000 கொடுத்து, வாங்கிக் கொள்ளலாம்.
கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் (வணிகம் அல்லாதவை) முதலிய அனைத்து தனியார் ஊர்திகளுக்கும் இந்த பாஸ் கிடைக்கும், - இந்த பாஸ், ஒரு ஆண்டு காலம் அல்லது சுங்கச் சாவடியை 200 தடவை கடந்து செல்லுதல் - எது முன்னால் முடிகிறதோ, அதுவரை செல்லுபடியாகும்.
பரணூர் டோல் பிளாசா கட்டணம் உயர்வை போல ஆத்தூர் டோல் பிளாசா கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















