மேலும் அறிய

திருச்சி: இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சாலை ஒரங்களில் உள்ள திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் இரவு நேரங்களில் சாலை ஓரமாக நின்று கொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், சேலம், திருச்சி, போன்ற முக்கிய நகரங்களில் அதிக அளவில் திருநங்கைகள் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகள் தங்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை முறையும் மேம்படுத்திக் கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அதை ஒரு சில திருநங்கைகள் மட்டுமே பயன்படுத்தி கொள்கிறார்கள். பல திருநங்கைகள் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக திருநங்கைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களை மரித்து பணம் பறிப்பது மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவது போன்ற புகார்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெரிய நகரங்களில் இருக்கக்கூடிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் இரவு நேரங்களில் திருநங்கைகள் அதிகளவில் சுற்றித் திரிவதும், அங்க இருக்க கூடிய மக்களிடம் தவறாக நடந்து கொள்வதும் வாடிக்கையாக்கி உள்ளது. இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் திருநங்கைகள் அதிக அளவில் ஒன்றாக கூடி வரும் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு மிரட்டுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளது.


திருச்சி: இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் ஒரங்களில் திருநங்கைகளால் பாலியல் தொல்லை, பணம், செல்போன்கள் வழிப்பறி மற்றும் சில இன்னல்களை சந்திப்பதாக பொதுமக்களிடமிருந்து அதிகளவில் வாய்வழி புகார்கள் பெறப்பட்ட நிலையில், திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் உத்தரவின்பேரில், 3 பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 18 காவல் ஆளிநர்களுடன் 3 குழுக்களாக பிரிந்து, கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், சஞ்சீவிநகர் சந்திப்பு மற்றும் அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேற்கண்ட சிறப்பு ரோந்தின்போது இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சுமார் 40 திருநங்ககளை பிடித்து, தக்க அறிவுரைகள் வழங்கி எச்சரித்தும், மேலும் எச்சரிக்கையை மீறி சாலைகளில் மீண்டும் சுற்றி திரியும் திருநங்கைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன் கருதி திருநங்கைகள் இரவு நேரத்தில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு இரவு நேர ரோந்து தொடர்ந்து நடத்தப்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Stalin Vs EPS: தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs EPS: தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.. மகளிர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் இன்று டெபாசிட் - முதலமைச்சர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
அடிதூள்.. மகளிர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் இன்று டெபாசிட் - முதலமைச்சர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
Magalir urimai thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 2,000 உயர்த்தப்படும்.! காலையிலேயே குஷியான அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை ரூ. 2,000 உயர்த்தப்படும்.! காலையிலேயே குஷியான அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
Top 10 News Headlines: ‘தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு‘, தமிழ்நாட்டில் அமித் ஷா, எகிப்து பிரமிடுகளில் தமிழர்களின் பெயர்கள் - 11 மணி செய்திகள்
‘தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு‘, தமிழ்நாட்டில் அமித் ஷா, எகிப்து பிரமிடுகளில் தமிழர்களின் பெயர்கள் - 11 மணி செய்திகள்
TN government Job: ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
Embed widget