மேலும் அறிய

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு; பண மூட்டையுடன் சுற்றிதிரிந்த 3 பேர் கைது..!

செந்துறை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7 வெண்கல மணிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் தனியாக இருப்பவர்களிடம் பணம், நகை கொள்ளை அடிப்பது,  கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை கொள்ளை அடித்து செல்வது என கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், அதே சமயம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரி மற்றும் திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தின் முந்திரி காட்டில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த கோவிலாக கருதப்படும் இந்த கோவிலை பல்வேறு கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த வெண்கல மணிகள் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


கோவில் உண்டியலை உடைத்து திருட்டு; பண மூட்டையுடன் சுற்றிதிரிந்த 3 பேர் கைது..!

இந்த நிலையில் பரணம் கிராமத்தில் சாக்கு மூட்டையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தாங்கள் மாங்காய் பறிக்க வந்ததாக கூறினர். 

இதனைதொடர்ந்து அந்த வாலிபர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் 7 கோவில் மணிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 வாலிபர்களையும் இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் உடையார்பாளையம் காலணி தெருவை சேர்ந்த ஆதிஷ் (வயது 18), நிர்மல்ராஜ் என்கிற நந்தா (18), பரமசிவம் (24) என்பதும் அவர்கள் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெண்கல மணிகளை திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 7 வெண்கல மணிகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவர்களை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
Embed widget