மேலும் அறிய

Crime: பெரம்பலூரில் டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

பெரம்பலூரை அடுத்த நாரணமங்கலத்தில் உள்ள டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்தனர்.

பெரம்பலூரை அடுத்த நாரணமங்கலத்தில் உள்ள டயர் தொழிற்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தை சேர்ந்த பழனியின் மகன் கமலஹாசன்(வயது 35) வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி மஞ்சுளாவுடன்(24) சிறுவாச்சூரில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து, வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் முன்பு கமலஹாசன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில், புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் மனோஜ்குமார்(24), அதே பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் கார்த்திகேயன்(27) ஆகியோர் கமலஹாசனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மனோஜ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அரணாரை பிரிவு சாலை அருகே வந்தபோது, நேற்று அவர்களை போலீசார் பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தினர்.


Crime: பெரம்பலூரில் டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

இதனை தொடர்ந்து கைது செய்யபட்டவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவிக்கையில், கடந்த 11-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் கமலஹாசன் வேலையை முடித்துக்கொண்டு தனது நண்பர் அருணின் மோட்டார் சைக்கிளில் சிறுவாச்சூருக்கு திரும்பினார். பின்னர் அங்கிருந்து அவர் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மனோஜ் குமாரின் மோட்டார் சைக்கிளில் அவரும், கார்த்திகேயனும் வந்துள்ளனர். அவர்களிடம் கமலஹாசன் 'லிப்ட்' கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த மனோஜ்குமாரும், கார்த்திகேயனும், மது குடிப்பதற்கு கமலஹாசனிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து கமலஹாசனை அவர்கள் தாக்கி, மோட்டார் சைக்கிளில் அமர வைத்து புதுநடுவலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர்.


Crime: பெரம்பலூரில் டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

இதில் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்ய ரூ.20 ஆயிரம் கேட்டு மீண்டும் அவரை தாக்கி உள்ளனர். அப்போது கமலஹாசன் தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது மனைவியிடம்தான் பணம் உள்ளது என்றும் கூறியதால், அவரது மனைவி மஞ்சுளாவை செல்போனில் தொடர்பு கொண்டு மனோஜ்குமார் பேசியுள்ளார். அப்போது மஞ்சுளா தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், காலையில் பேசிக்கொள்ளலாம் என்றும், கமலஹாசனை உடனடியாக வீட்டிற்கு பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்போம் என்றும் கூறியுள்ளார். இதனால் செல்போனை துண்டித்துவிட்டு, 2 பேரும் சேர்ந்து கமலஹாசனை தாக்கியுள்ளனர். பின்னர் புதுநடுவலூர் கிராமத்திற்கு அவரை அழைத்துச்சென்று அங்கே கட்டையால் கமலஹாசனை இருவரும் தாக்கியதில், கமலஹாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget