மேலும் அறிய

அரியலூர் : 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.. ஏன்?

ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 சிறுவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதாகவும், சிலர் பைக் ரேஸிசில் ஈடுபடுவதாக பல்வேறு புகார் வந்தது. மேலும் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பொதுமக்களும், எதிரே வரும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்து வந்தனர். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கும்பகோணம் ரோடு புறவழிச்சாலை அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷாஹிராபானு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், அவர்கள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்பதும், லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு உரிய அறிவுரை கூறி அபராதம் விதித்தனர். இதேபோல் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கடந்த 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்தது.. 


அரியலூர் : 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.. ஏன்?

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் இயக்கி வருகிறார்கள். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், மதுபோதையில் சென்றவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதன்காரணமாக அரியலூரில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குவது தற்போது குறைந்து உள்ளது. இருப்பினும் விபத்தை குறைப்பதாக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம் திருட்டு போவது அதிகரித்து வந்தது. குறிப்பாக பொதுமக்களும் அச்சத்தில் இருந்தனர், ஆகையால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கபட்டது எனவும் தெரிவித்தனர். குறிப்பாக தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trichy Power Shutdown: திருச்சியில் நாளைய(30-05-26)மின் தடை.. அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்
Trichy Power Shutdown: திருச்சியில் நாளைய(30-05-26)மின் தடை.. அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்! திருச்சியில் 'டீப் ஸ்கை' விண்வெளி காட்சி அறிமுகம்
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்! திருச்சியில் 'டீப் ஸ்கை' விண்வெளி காட்சி அறிமுகம்
Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
Embed widget