மேலும் அறிய

திருச்சி: என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின - அதிகாரிகள் தகவல்

திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையில் ரூ.2.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், வெளிநாட்டு பணம் முறைகேடு, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் மற்றும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் அவ்வப்போது தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம், காத்திருப்பு, தற்கொலை முயற்சி என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றைய முன்தினம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு முகாமில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சிறைத்துறை ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை தமிழர்களான குணசேகரன், பூங்கொடி கண்ணன், திலீபன், ஸ்டான்லி, கென்னடி உள்ளிட்ட சிலரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் குணசேகரன் அடிக்கடி வந்து பார்த்து சென்ற பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


திருச்சி: என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின - அதிகாரிகள் தகவல்

மேலும் இவர் ஏற்கனவே போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் ஆவார். இவருக்கும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் என்ற இலங்கை தமிழருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் புதன் கிழமை அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6.45 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து சென்றதாக தெரிகிறது. இது திருச்சி மத்திய ஜெயில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சிறப்பு முகாமை பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க கலெக்டர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 


திருச்சி: என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின - அதிகாரிகள் தகவல்

இந்த நிலையில் முகாமில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க என்.ஐ.ஏ. யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் முகாம் பாதுகாப்பினை மேம்படுத்த விரிவான கடிதம் ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப உள்ளனர். இந்த அதிரடி சோதனை கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் கடத்தல் வழக்கு, போலி பாஸ்போர்ட் விவகாரம், முகாம் கைதிகள் விடுவிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே திருச்சி மத்திய ஜெயிலில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கான இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போலி பாஸ்போர்ட், போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தோணியில் இந்தியா வந்தடைதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றாலும் வழக்கு முடியும் வரை சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்
Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
Embed widget