மேலும் அறிய

திருச்சி: என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின - அதிகாரிகள் தகவல்

திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையில் ரூ.2.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், வெளிநாட்டு பணம் முறைகேடு, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் மற்றும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் அவ்வப்போது தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம், காத்திருப்பு, தற்கொலை முயற்சி என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றைய முன்தினம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு முகாமில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சிறைத்துறை ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை தமிழர்களான குணசேகரன், பூங்கொடி கண்ணன், திலீபன், ஸ்டான்லி, கென்னடி உள்ளிட்ட சிலரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் குணசேகரன் அடிக்கடி வந்து பார்த்து சென்ற பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


திருச்சி: என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின - அதிகாரிகள் தகவல்

மேலும் இவர் ஏற்கனவே போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் ஆவார். இவருக்கும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் என்ற இலங்கை தமிழருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் புதன் கிழமை அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6.45 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து சென்றதாக தெரிகிறது. இது திருச்சி மத்திய ஜெயில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சிறப்பு முகாமை பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க கலெக்டர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 


திருச்சி: என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின - அதிகாரிகள் தகவல்

இந்த நிலையில் முகாமில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க என்.ஐ.ஏ. யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் முகாம் பாதுகாப்பினை மேம்படுத்த விரிவான கடிதம் ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப உள்ளனர். இந்த அதிரடி சோதனை கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் கடத்தல் வழக்கு, போலி பாஸ்போர்ட் விவகாரம், முகாம் கைதிகள் விடுவிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே திருச்சி மத்திய ஜெயிலில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கான இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போலி பாஸ்போர்ட், போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தோணியில் இந்தியா வந்தடைதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றாலும் வழக்கு முடியும் வரை சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget