மேலும் அறிய

“தமிழ்நாட்டில் தினம் தினம் ரைடு நடக்கிறது; அமைச்சர்கள் பயத்தில் இருக்கிறார்கள்” - போட்டு உடைத்த அமைச்சர் நேரு

சேலத்தை பொருத்தவரை பாமக தனித்து தேர்தலை சந்தித்தால் திமுக அமோக வெற்றி பெறும். மாறாக கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவது சிரமம் என தெரிவித்தேன்.

திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் ராமலிங்கம் எம்.பி., கோவை செழியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கூட்டத்தில், நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.வினர் முழுமையாக பங்கேற்கும் வகையில் அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற உள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு முகாமின் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்று புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


“தமிழ்நாட்டில் தினம் தினம் ரைடு நடக்கிறது; அமைச்சர்கள் பயத்தில் இருக்கிறார்கள்” - போட்டு உடைத்த அமைச்சர் நேரு

மேலும், கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, “நமது கட்சியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் நமக்குள் அதை வைத்துக்கொண்டு, கட்சி வளர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன்,தம்பி போன்று செயல்பட வேண்டும். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அது தலைமை நிச்சயமாக செய்யும். பாஜக அரசு - தமிழ்நாட்டில் திமுகவை அழிக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனால் தினம் தினம் அமைச்சர்கள் பயந்து உள்ளனர். இந்நிலையில்தான் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஆகையால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை எடுத்துரைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். 


“தமிழ்நாட்டில் தினம் தினம் ரைடு நடக்கிறது; அமைச்சர்கள் பயத்தில் இருக்கிறார்கள்” - போட்டு உடைத்த அமைச்சர் நேரு

திருச்சி , சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என கட்சி தலைமை என்னிடம் கேட்டது. திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம், ஆனால் சேலத்தை பொருத்தவரை பாமக தனித்து தேர்தலை சந்தித்தால் திமுக அமோக வெற்றி பெறும். மாறாக கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவது சிரமம் என தெரிவித்தேன். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும். இந்நிலையில் நாம் அனைவரும் கலைஞர் நூற்றாண்டு விழாவை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் அனைத்து பகுதிகளிலும் 60 அடி உயரம் கொடி கம்பம் வைக்க வேண்டும். திருச்சி மத்திய மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் குறைந்தது 100 கொடி கம்பம் நிறுவ வேண்டும். அதுமட்டுமில்லாமல் 100 இடங்களில் கலைஞரின் திரு உருவ சிலையை வைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 

இந்த கூட்டத்தில் மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி உள்பட திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget