மேலும் அறிய

திருச்சியில் 815 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் 1989 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மீண்டும் 1996 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் வகையில் திட்டத்தினை விரிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி. திருச்சி மாவட்டத்தில் 8,213 மாணவர்களுக்கும் 12.186 மாணவியர்களுக்கும் சேர்த்து 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் 20.399 மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் 815 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் திருச்சி  மாவட்டத்தில் இதுவரை 9022 மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.


திருச்சியில் 815 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாட்டின் போக்குவரத்து மிக கடினமான போக்குவரத்தாக இருந்து கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நாள் ஒன்றுக்கு பதிவான வாகனங்கள் 5000 ஆக இருந்தது. ஆனால் தற்போது 8000 வாகனங்கள் வரை பதிவாகும் சூழ்நிலை உள்ளது. அதற்கேற்ப சாலை வசதியை முடிந்தவரை விரிவாக்கம் செய்து கொண்டு வருகிறோம். எனவே சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் கவனமுடன் பொறுமையாக பயணிக்க வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு ஆண்டும் 2000 வகுப்பறைகள் புதிதாக கட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறி உள்ளார். அதிலும் கிராம புறங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து தர உத்தரவிட்டுள்ளார்கள். காலை உணவு திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைக்கவுள்ளார்கள்.  ஆகவே அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப.., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன். முதன்மை கல்வி அலுவலர் திரு.சிவகுமார். மண்டல தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே
"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget