மேலும் அறிய

திருச்சியில் 815 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் 1989 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மீண்டும் 1996 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் வகையில் திட்டத்தினை விரிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி. திருச்சி மாவட்டத்தில் 8,213 மாணவர்களுக்கும் 12.186 மாணவியர்களுக்கும் சேர்த்து 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் 20.399 மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் 815 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் திருச்சி  மாவட்டத்தில் இதுவரை 9022 மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.


திருச்சியில் 815 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாட்டின் போக்குவரத்து மிக கடினமான போக்குவரத்தாக இருந்து கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நாள் ஒன்றுக்கு பதிவான வாகனங்கள் 5000 ஆக இருந்தது. ஆனால் தற்போது 8000 வாகனங்கள் வரை பதிவாகும் சூழ்நிலை உள்ளது. அதற்கேற்ப சாலை வசதியை முடிந்தவரை விரிவாக்கம் செய்து கொண்டு வருகிறோம். எனவே சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் கவனமுடன் பொறுமையாக பயணிக்க வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு ஆண்டும் 2000 வகுப்பறைகள் புதிதாக கட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறி உள்ளார். அதிலும் கிராம புறங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து தர உத்தரவிட்டுள்ளார்கள். காலை உணவு திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைக்கவுள்ளார்கள்.  ஆகவே அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப.., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன். முதன்மை கல்வி அலுவலர் திரு.சிவகுமார். மண்டல தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget