மேலும் அறிய

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

புதுக்கோட்டையில் ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல், ஊர் பெயர் பதாகைகள் அமைத்தல், சாலையில் வெள்ளைக் கோடு போடுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது பிரதான அலுவலகம் புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 2 கார்களில் திடீரென வந்து இறங்கினர். மேலும் நுழைவுவாயில் கதவை மூடி அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் அலுவலகத்தில் இருந்தவர்களையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலகத்திற்குள் அதிகாரிகள் புகுந்து ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் கணக்குகள் சரிபார்க்கும் பிரிவுக்கு சென்றும் சோதனையிட்டனர். அங்கிருந்த ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனையானது பாண்டிதுரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.


புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

மேலும் இந்த சோதனையின்போதே அவரது அலுவலகத்தின் அருகே உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சிட்கோ தொழிற்சாலையில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை ஆகிய இடங்களிலும், கீழ 2-ம் வீதியில் உள்ள கட்டிட அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் சோதனை காலை முதல் மாலை வரை நீடித்தது. இதனை தொடர்ந்து இதேபோல் கோவை பீளமேட்டில் உள்ள பாண்டிதுரையின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனை காலை தொடங்கி இரவுவரை நீடித்தது. மேற்கண்ட சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பாண்டிதுரையின் தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றிய போது அவர் இறந்த நிலையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி பாண்டிதுரைக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறிது ஆண்டுகள் பணியாற்றிய பின் அதில் இருந்து விலகி, ஒப்பந்த பணிகளை எடுத்து மேற்கொள்ள தொடங்கியதாக கூறப்படுகிறது.


புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

இந்நிலையில்  அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பாண்டிதுரை நெருக்கமாக இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. பாண்டிதுரையின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையால் புதுக்கோட்டை, கோவையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Embed widget