மேலும் அறிய

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் - பெரம்பலூர் ஆட்சியர் கற்பம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதியதாக மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற கற்பகம் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்த ப.ஸ்ரீவெங்கடபிரியாவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணி மாற்றம் செய்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்த க.கற்பகம் பதவி உயர்வாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமித்து கடந்த 30-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக கற்பகம் நேற்று காலை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த ஸ்ரீவெங்கடபிரியா ஒப்படைத்தார். புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட கற்பகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அனைத்துத்துறைகளின் அலுவலர்கள், விவசாயிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் கற்பகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக என்னை நியமித்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் - பெரம்பலூர் ஆட்சியர் கற்பம்
 
இதனை தொடர்ந்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திடவேண்டும், என்றார். மேலும் அவர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை பாதுகாக்கவும், மரங்களை வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget