மேலும் அறிய

திருச்சியில் கனமழை - சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் பேருந்து

திருச்சியில் பெய்த பலத்த மழையால் மேலப்புதூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய தனியார் பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து மதியம் 3 மணிக்கு பிறகு வெயில் குறைந்து மேகம் திரண்டது. அப்போது, சில இடங்களில் சிறிது நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் ஓடின. இதன் காரணமாக திருச்சி மேலப்புதூர் சாலை அருகே உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டது. இதனிடையே சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த தனியார் பேருந்து ஒன்று தேங்கி இருந்த மழை நீரில் இறங்கியது. இதில் அந்த பேருந்து வெளியே வரமுடியாமல் திணறியது. பேருந்தில்  பயணம் செய்த பயணிகள் இறக்கி விடப்பட்டு நடந்தே மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து அந்த பேருந்தை பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து மீட்கப்பட்டது.


திருச்சியில் கனமழை - சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் பேருந்து

மேலும் ஒத்தக்கடை சிக்கனல், அரசு மருத்துவமனை ரோடு, உறையூர் செல்லும் சாலை, பாலக்கரை செல்லும் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. தேங்கி கிடைந்த குப்பைகள் மழை நீரால் சாலை நடுவே அடித்து வரப்பட்டது. திருச்சி, மன்னார்புரம், தில்லைநகர், கோட்டை, சத்திரம், மத்திய பஸ் நிலையப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பாரதிதாசன், மேலரண் சாலை, தெப்பக்குளம், சாஸ்திரி, வில்லியம்ஸ், உழவா்சந்தை உள்ளிட்ட சாலைப் பகுதிகளிலும் நகா்ப்பகுதிகளின் தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நனைந்தபடி சென்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றது. 


திருச்சியில் கனமழை - சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் பேருந்து

மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள், சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்வதற்காக தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் குழிகளை மாநகராட்சி ஊழியர்கள் சரியாக மூடுவதில்லை. இதனால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.  குறிப்பாக மழைக்காலங்களில் நீர் அதிக அளவில் சாலைகளில் தேங்கி இருப்பதால் ,பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்றவர்கள் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் திருச்சி மாநகரில் நடந்துள்ளது. ஆகையால் உடனடியாக திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
90 ஆண்டு பாரம்பரிய பொன்மலை பணிமனையில் 'விஐபி' ரயில்: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு புதுப்பொலிவு!
90 ஆண்டு பாரம்பரிய பொன்மலை பணிமனையில் 'விஐபி' ரயில்: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு புதுப்பொலிவு!
அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!
அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Chennai Power Cut: சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
Embed widget