மேலும் அறிய

திருச்சியில் கனமழை - சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் பேருந்து

திருச்சியில் பெய்த பலத்த மழையால் மேலப்புதூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய தனியார் பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து மதியம் 3 மணிக்கு பிறகு வெயில் குறைந்து மேகம் திரண்டது. அப்போது, சில இடங்களில் சிறிது நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் ஓடின. இதன் காரணமாக திருச்சி மேலப்புதூர் சாலை அருகே உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டது. இதனிடையே சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த தனியார் பேருந்து ஒன்று தேங்கி இருந்த மழை நீரில் இறங்கியது. இதில் அந்த பேருந்து வெளியே வரமுடியாமல் திணறியது. பேருந்தில்  பயணம் செய்த பயணிகள் இறக்கி விடப்பட்டு நடந்தே மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து அந்த பேருந்தை பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து மீட்கப்பட்டது.


திருச்சியில் கனமழை - சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் பேருந்து

மேலும் ஒத்தக்கடை சிக்கனல், அரசு மருத்துவமனை ரோடு, உறையூர் செல்லும் சாலை, பாலக்கரை செல்லும் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. தேங்கி கிடைந்த குப்பைகள் மழை நீரால் சாலை நடுவே அடித்து வரப்பட்டது. திருச்சி, மன்னார்புரம், தில்லைநகர், கோட்டை, சத்திரம், மத்திய பஸ் நிலையப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பாரதிதாசன், மேலரண் சாலை, தெப்பக்குளம், சாஸ்திரி, வில்லியம்ஸ், உழவா்சந்தை உள்ளிட்ட சாலைப் பகுதிகளிலும் நகா்ப்பகுதிகளின் தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நனைந்தபடி சென்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றது. 


திருச்சியில் கனமழை - சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் பேருந்து

மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள், சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்வதற்காக தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் குழிகளை மாநகராட்சி ஊழியர்கள் சரியாக மூடுவதில்லை. இதனால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.  குறிப்பாக மழைக்காலங்களில் நீர் அதிக அளவில் சாலைகளில் தேங்கி இருப்பதால் ,பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்றவர்கள் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் திருச்சி மாநகரில் நடந்துள்ளது. ஆகையால் உடனடியாக திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Embed widget