மேலும் அறிய

திருச்சியில் எல்பின் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

திருச்சியில் எல்பின் நிதிநிறுவனத்துடன் தொடர்புடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீடு உள்பட 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தொகை தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், வட்டியுடன் முதலீட்டுக்கு தகுந்த பொருட்கள் அளிப்பதாகவும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்தநிலையில், கடந்த ஓராண்டாக வட்டி தொகை திரும்ப வழங்கப்படவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த நிதிநிறுவனத்தை நடத்தி வந்த ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் அவரது சகோதரர் எஸ்.ஆர்.கே. ரமேஷ் ஆகியோர் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எல்பின் நிறுவனத்தின் இயக்குனர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரனின் திருச்சி கீழபுலிவார்டு சாலை வேதாத்ரிநகரில் உள்ள வீடு உள்பட பல்வேறு இடங்களில் திருச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார், சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


திருச்சியில் எல்பின் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 18 இடங்களில்  பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

இதேபோல் வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் கடலூர் காவல்துறை துணை சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பீமநகரில் உள்ள ஒரு அச்சகத்தில் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் தலைமையில் சோதனை நடந்தது. திருச்சியில் எல்பின் நிறுவனத்துடன் தொடர்புடைய வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் அலுவலகத்தின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருச்சியில் எல்பின் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 18 இடங்களில்  பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் தொகுதிக்கு பணப்பட்டுவாடா செய்ய ரூ.2 கோடிக்கு மேல் கொண்டு சென்றதற்கான வழக்கும் கவுன்சிலர் பிரபாகரன் மேல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது அவரது பாஸ்போர்ட், 2 செல்போன்கள் மற்றும் ஒரு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget