மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு இனி வேலை இல்லை - டி.ஐ.ஜி பகலவன் அதிரடி பேட்டி

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி டி.ஐ.ஜி பகலவன் பேட்டி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே 19ஆம் தேதி ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேர் கலந்து கொண்டனர்.  அந்த ஒன்பது பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நேற்று  திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஜெகன் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக போலீசார் ஜெகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜெகன் உயிரிழந்தார். இது குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு இனி வேலை இல்லை - டி.ஐ.ஜி பகலவன் அதிரடி பேட்டி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருச்சி டிஐஜி பகலவன் பேசியதாவது:

திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டி ஐ ஜி பகலவன் நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். திருச்சி ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொறுத்தவரை, அவரை தேடி சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கை துப்பாக்கி, மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுத வைத்து தாக்க முற்பட்டார்.   இதில்  காவல் உதவி ஆய்வாளர் வினோத்  காயமடைந்துள்ளார். காயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் நலமுடன் உள்ளார். திருச்சி மாவட்டத்தில் ரவுடிசத்திற்கு இடம் கிடையாது. இது போன்ற எண்ணம் உடையவர்களை ஒருபோதும் காவல்துறை அனுமதிக்காது. நடவடிக்கை கடுமையாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு நாட்களாக ரவுடிகளை ஸ்பெஷல் பிரான்ச் போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில்  சனமங்கலம் பாரஸ்ட் ஏரியாவில் துப்பாக்கியுடன் பணம் பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்கு பன்றி மேய்க்கும் தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் கிடைத்தது.


திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு இனி வேலை இல்லை - டி.ஐ.ஜி பகலவன் அதிரடி பேட்டி

மேலும், அப்பகுதியில் சமூக விரோதிகள் அராஜகம் செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு  சென்ற பொழுது, ஜெகன் என்ற இந்த நபர்  அங்கு இருந்தார். தேடப்பட்ட குற்றவாளி என்பதால் அவரை பிடிக்க முற்பட்டனர். அப்பொழுது துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, அருவா உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்டார் இதனால் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.  ஜெகன் மீது நான்கு கொலை வழக்கு 6 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 50 வழக்கில் ஈடுபட்டுள்ளார்.  இதில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரவுடீசத்திற்கு  வேலை இல்லை. இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

யார் அந்த நபர்? - திருச்சியில் விஜய்யின் அரசியல் நகர்வுகள்... பின்னணி என்ன?
யார் அந்த நபர்? - திருச்சியில் விஜய்யின் அரசியல் நகர்வுகள்... பின்னணி என்ன?
நிழல் இல்லா அதிசயம்: திருச்சியில் வானம் காட்டிய வியப்பு
நிழல் இல்லா அதிசயம்: திருச்சியில் வானம் காட்டிய வியப்பு
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கும்பல்: 1 கிலோ தங்கம் சுருட்டல்
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கும்பல்: 1 கிலோ தங்கம் சுருட்டல்
போட்டியிட்ட தொகுதியில் ஓட்டு இல்லை... முக்கிய வேட்பாளர்களின் நிலை
போட்டியிட்ட தொகுதியில் ஓட்டு இல்லை... முக்கிய வேட்பாளர்களின் நிலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
Kanimozhi: முதலமைச்சராகும் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து - என்ன சொன்னார் தெரியுமா?
முதலமைச்சராகும் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து - என்ன சொன்னார் தெரியுமா?
TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Vijay Swearing In: ’’உங்க விஜய்.. நா வந்துட்டேன்..’’ மே 7 காலை 11.30-க்கு முதல்வராகும் தவெக தலைவர்!
Vijay Swearing In: ’’உங்க விஜய்.. நா வந்துட்டேன்..’’ மே 7 காலை 11.30-க்கு முதல்வராகும் தவெக தலைவர்!
DMK : ’250 கோடி ரூபாய் Fees’ திமுக தோல்விக்கு காரணமான 2 நிறுவனங்கள்..!
’250 கோடி ரூபாய் Fees’ திமுக தோல்விக்கு காரணமான 2 நிறுவனங்கள்..!
TN Govt Formation: ஆளுநருடன் சந்திப்பு ... ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்
TN Govt Formation: ஆளுநருடன் சந்திப்பு ... ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் பெண்கள் , தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்! விபரம் இதோ
தமிழக சட்டப்பேரவையில் பெண்கள் , தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்! விபரம் இதோ
Embed widget