மேலும் அறிய

வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தம் திட்டம் - திருச்சியில் கணக்கெடுப்பு தீவிரம்

திருச்சி நகர்ப்பகுதிகளில் வசிக்கும் வீடு அற்ற சுமார் 1,500 மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துவக்கி உள்ளது மாநகராட்சி நிர்வாகம்

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டாலும், மக்களின் நலனை கருதி கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தும் இலக்கை நோக்கி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை திருச்சி மாவட்டத்தில் 23,33,196 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் முதல் தவனை தடுப்புசி 15,68,070 பேர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7,65,126 பேர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தோற்று குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அலட்சியப் போக்கில் பல்வேறு இடங்களில் இயல்பாக முகக் கவசங்கள் அணியாமலும், கூட்டம் கூட்டமாகவும் நடமாடுவது பார்க்க முடிகிறது. இதனால் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அரசு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பத்தாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.


வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தம் திட்டம் - திருச்சியில் கணக்கெடுப்பு தீவிரம்

திருச்சி மாநகர் பகுதிகளில் கொரோனா ஹாட்ஸ்பாட் குறித்த ஆய்வை நடத்தி உள்ள மாநகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதிகளில் வசிக்கும் வீடு அற்ற மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துவக்கி உள்ளது. தோராயமாக 1,500 பேர் வீடு அற்ற மக்களாக அடையாளம் காணப்பட்டு உள்ள நிலையில், இவர்களுக்கு, டிசம்பர் முதல் வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வீடு அற்றவர்களில், ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட அடையாள ஆவணம் கொண்டவர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருச்சி பகுதியில் கொரோனா ஹாட்ஸ்பாட் குறித்த ஆய்வை, மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியின் மூலம், சில வாரங்களுக்கு முன் நடத்தியது. இந்த ஆய்வின் மூலம், வீடு அற்ற மக்களுக்கு, தடுப்பூசி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் 40 மற்றும் அந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.


வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தம் திட்டம் - திருச்சியில் கணக்கெடுப்பு தீவிரம்

நகர்ப்புற தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. முகமது ஹக்கீம் கூறியதாவது, தற்போதைய நிலையில் வீடற்ற 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவர்களிடம் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தன. இவர்கள், தங்களது இரண்டு தவணை தடுப்பூசியையும் விரைவில் செலுத்திக் கொள்ளவும், அவர்களது விருப்பப்படி, இடம் மாற்றி கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதாக ஹக்கீம் குறிப்பிட்டு உள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீடற்ற மக்கள், வேறு பகுதிகளுக்கும் இடம் பெயரும்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் ஆதாரத்தை காட்ட ஒப்புகை ரசீதும் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அரசு கூறிய வழிகாட்டு விதிமுறைகளை முறையாக அனைவரும் பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Embed widget