மேலும் அறிய

திருச்சியில் பொதுக் கழிப்பறை குறைகள் - ‘க்யூ ஆர்’ கோடு மூலம் புகார் தெரிவிக்கலாம்

திருச்சி மாநகராட்சியின் கழிவறைகளில் உள்ள குறைபாடுகளை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் புகார் தெரிவிக்கும் திட்டம் . இதற்காக 404 கழிப்பிட சுவர்களில் க்யூ ஆர் கோடு செயலி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் கடந்த 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி 9,15,569  மக்கள் வசித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின் படி ( 2020 ம் ஆண்டு ) 10,45,436 மக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை இருக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 65 வார்டுகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாய கழிப்பிடங்களை பராமரிக்க கிராமாலயா, மகளிர் சுய உதவிக் குழு, மற்றும் தனியார் தொண்டு அமைப்பினரிடம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது கழிப்பிடத்தை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் பொது ஏலம் மூலம் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் அதன் சுற்றுப்பகுதிகளில் 46 பொது கழிப்பிடம், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 368 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பொது கழிப்பிடங்களில் கழிவறைக்கு ரூ.5, சிறுநீர் கழிக்க ரூ.2 மற்றும் குளிப்பதற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதே போல் சமுதாய கழிப்பிடத்தில் கழிவறைக்கு ரூ.2 , குளிப்பதற்கு ரூ 5, வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணங்களை மாநகராட்சிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் செலுத்தி வருகின்றனர். 


திருச்சியில் பொதுக் கழிப்பறை குறைகள் -  ‘க்யூ ஆர்’  கோடு மூலம் புகார் தெரிவிக்கலாம்

இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையினர் அனைத்து மக்களின் நலன் பேணிக்காக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவற்றில் கழிப்பிடங்கள் சுகாதாரமாகவும் பொது நலன்களை பேணிக்காக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொது கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்களின் முகப்பு பகுதிகளில் சுவரொட்டியில் க்யூ ஆர் கோடு அமைத்து அதன் மூலம்  கழிப்பிடத்தில் அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளனர். 


திருச்சியில் பொதுக் கழிப்பறை குறைகள் -  ‘க்யூ ஆர்’  கோடு மூலம் புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் தங்களின் செல்போனில் இந்த க்யூ ஆர் கோடு மூலம் புகார் அளிக்கும்போது அதில் 1- கழிப்பறை சுத்தமாகவும், பயன்படுத்தும் நிலையிலும் உள்ளதா?, 2- கை கழுவும் இடம் சுத்தமாகவும் பயன்படுத்தும் நிலையிலும் உள்ளதா?, 3- தண்ணீர் வசதி உள்ளதா?, 4- போதுமான காற்றோட்ட வசதி உள்ளதா?, 5- கழிப்பறையின் உள்ளேயும், வெளியேயும் போதுமான வெளிச்சம் உள்ளதா?, 6- கழிப்பறை கதவுகளில் தாழ்ப்பாண் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா?, 7- கழிப்பறையில் துர்நாற்றம் உள்ளதா?, என்பது போன்ற 7 கேள்விகள் கேட்கப்படும். இதில் எந்த குறை உள்ளது என்பதை பொதுமக்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இதனை மாநகராட்சியில் உள்ள தொழில்நுட்ப பிரிவினர் பொது சுகாதார அலுவலகளுக்கு  அனுப்பி வைக்கின்றனர்.  பொது சுகாதார துறையினர் இந்த புகாரை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைக்கின்றனர். உடனடியாக கமிஷனரின் உத்தரவின் பேரில் புகார் பெறப்பட்ட கழிப்பறைக்கு செல்லும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையினரின் இந்த க்யூ ஆர் கோடு புகார் குறித்த சுவரொட்டி மாநகரில் உள்ள 46 பொது கழிப்பிடம், 368 சமுதாய கழிப்பிடம் என மொத்தம் 404 கழிப்பிடத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக ஒட்டி வைத்து அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Embed widget