மேலும் அறிய

திருச்சி மத்திய சிறையில் மத்திய அமலாக்கதுறை அதிரடி சோதனை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் மத்திய அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வழக்கு முடிந்த பின்னரும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் உண்ணாவிரதம், மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் கையை பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் சமீபத்தில் 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை செம்பட்டி காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் ஊழல் நடந்திருக்கிறது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று  ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.  


திருச்சி மத்திய சிறையில் மத்திய அமலாக்கதுறை அதிரடி சோதனை

இந்தநிலையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பை (என்.ஐ.ஏ.) சேர்ந்த டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் திருச்சி மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு முகாமிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையை தொடங்கினர். அவர்களின் பாதுகாப்புக்காக வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் 100 துணை ராணுவப்படையினரும் சிறப்பு முகாமில் குவிக்கப்பட்டனர்.அப்போது திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோணியார்கோவில் தெரு பகுதியில் தங்கி இருந்த குணசேகரனின் டிரைவர் நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். விக்னேஷ் முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் உள்பட அவரது நண்பர்கள் 7 பேருக்கும் உணவு மற்றும் பொருட்களை வெளியே இருந்து வாங்கி கொடுப்பது, பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றுக்கும் உதவி செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் வீட்டில் 3 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த சோதனையின் போது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்டவைகளை மதிப்பீடு செய்ய நகை மதிப்பீட்டாளரும் சிறப்பு முகாமிற்குள் அழைத்து செல்லப்பட்டார். மேலும், வெளிநாட்டு அகதிகள் பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ், மடிக்கணினி மற்றும் நகைகள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


திருச்சி மத்திய சிறையில் மத்திய அமலாக்கதுறை அதிரடி சோதனை

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணிமுதல் மத்திய அமலாக்கதுறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களை வைத்து தற்போது தீவிரமான விசாரனையை அதிகாரிகள் மேற்க்கொண்டு வருகிறார்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget