Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
டெல்லி போராட்டம் குறித்து பேசிய பாஜக எம்.பி கங்கனா ரணாவத்
பிரதமர் மோடி எங்களை சந்தித்து பல அறிவுறுத்தல்களை வழங்கினார்
குறிப்பாக மக்களின் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்பது தொடர்பாக
ஊழலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய உத்திகளைப் பிரதமர் எங்களுக்கு வழங்கினார்
ஊழலை பரப்புவர்களை எப்படு கையாள்வது என்பது பற்றியும் சொன்னார்
அதை எப்படி நாம் எதிர்கொள்வது என்றும் சொன்னார்
நமது சாதனைகள் குறித்தும் பிரதமர் பேசினார்
அறிவியல் மற்றும் ஹைட்ரஜன் ரயில்கள் பற்றி முடிந்தவரை அதிகமாக பேச வேண்டும் என சொன்னார்
இதன் மூலம் நாம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குத் தயாராக முடியும்
இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர் – செய்தியாளர்
பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. காவல்துறையினரும் காயமடைந்தனர்- செய்தியாளர்
நாங்கள் மிகவும் பயந்து போயிருந்தோம் – கங்கனா ரணாவத்
கதவுகள் மூடப்பட்டுவிட்டன
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உள்ளேயே சிக்கிக் கொண்டோம்
அவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டபோது, எங்களால் வெளியே கூட வர முடியவில்லை
போராட்டக்காரர்கள் எங்களை எப்படி தாக்க வந்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்
ஒரு கட்டத்தில், அவர்கள் எங்களைத் தாக்கிவிடுவார்களோ என்று நாங்கள் பயந்தோம்
ஆனால் நான் காவல்துறையை பாராட்டுகிறேன்
அவர்கள் எங்களைப் பாதுகாத்து, கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்
எங்களுக்கு பெரிய ஆபத்து நேரவில்லை
ட்ரெண்டிங் செய்திகள்






















