மேலும் அறிய

கோலாகலமாக நடைபெற்ற ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா  ஆவூரில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கு அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பாஸ்கா, தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பாஸ்கா விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. அன்று மாலை கீரனூர் பங்குத்தந்தை அருளானந்தம் தலைமையில் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு கூட்டு திருப்பலி நடத்தினர்.  இதைதொடர்ந்து இரவு 10 மணியளவில் ஏசுவின் திருப்பாடுகளின் பாஸ்கா நிகழ்வான மழைப்பொழிவு, இறுதி இரவு உணவு, போதனைகள், புதுமைகள், பாடுகள், மரணம், மரித்த ஏசுவின் இறுதி ஊர்வலம் உள்ளிட்ட உள்ளத்தை உருக்கும் காட்சிகள் நடைபெற்றது. இதையடுத்து வாணவேடிக்கைகள் முழங்க வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று சப்பர பவனி வீதி உலா நடைபெற்றது. 
 

கோலாகலமாக நடைபெற்ற ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம்
 
இதை தொடர்ந்து  இரவு 10.30 மணியளவில் ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்காவும் அதனை தொடர்ந்து அவர் இங்கே இல்லை அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற தலைப்பில் மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தை செலஸ்டின் மறையுரை ஆற்றினார். விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 8.30 மணியளவில் திருச்சி மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருவிழா சிறப்பு திருப்பலி ஆற்றினர். பின்னர் மதியம் 1.30 மணியளவில் உயிர்த்த ஆண்டவரின் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து உயிர்த்த ஆண்டவரின் சொரூபத்தை ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேரான வண்ண மலர்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயர தேரில் வைத்தனர். அதேபோல சம்மனசு, மாதா ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்ட 2 சிறிய தேர்கள் தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து திருச்சி புனித தெரசாள் ஆலய பங்குத்தந்தை அன்புராஜ் தேரை புனிதம் செய்து அர்ச்சித்து வைத்தார்.
 

கோலாகலமாக நடைபெற்ற ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம்
 
பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் பச்சைக் கொடியை காட்டி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதை அடுத்து பக்தர்கள் 3 தேரையும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் தேரோடும் 4 வீதிகளின் வழியாக அசைந்தாடி சென்று மதியம் 2.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் திருச்சி, விராலிமலை, கீரனூர், மாத்தூர், மண்டையூர், நாகமங்கலம், இலுப்பூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.  பாதுகாப்பு ஏற்பாடுகளை மாத்தூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான காவல்துரையினர்  செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் தலைமையில் ஊர் நிர்வாகக்குழு தலைவர் செபஸ்தியான் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
Suburban Train Cancel: ரயில் பயணிகள் நோட் பண்ணிக்கோங்க; 2 நாட்கள் 21 புறநகர் ரயில்கள் ரத்து - சிறப்பு ரயில்கள் இயக்கம்
ரயில் பயணிகள் நோட் பண்ணிக்கோங்க; 2 நாட்கள் 21 புறநகர் ரயில்கள் ரத்து - சிறப்பு ரயில்கள் இயக்கம்
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” -  மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” - மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூதுவிடும் திமுக, அதிமுக தலைகள்! கண்டிஷன் போடும் விஜய்! விஸ்வாசம் தான் முக்கியம்திமுகவில் காளியம்மாள்? விஜய் மீது திடீர் விமர்சனம்! தட்டித்தூக்கிய ராஜிவ் காந்திTVK Alliance | ”அதிமுகவுடன் கூட்டணி இல்லை” விஜய் உருவாக்கும் மாற்று அணி! ஆதவ் போட்ட ஸ்கெட்ச்!Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
Suburban Train Cancel: ரயில் பயணிகள் நோட் பண்ணிக்கோங்க; 2 நாட்கள் 21 புறநகர் ரயில்கள் ரத்து - சிறப்பு ரயில்கள் இயக்கம்
ரயில் பயணிகள் நோட் பண்ணிக்கோங்க; 2 நாட்கள் 21 புறநகர் ரயில்கள் ரத்து - சிறப்பு ரயில்கள் இயக்கம்
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” -  மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” - மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
அதிமுகவில் சோகம்... விபத்தில் பலியான முன்னாள் அமைச்சரின் பேத்தி.. தலைவர்கள் இரங்கல்
அதிமுகவில் சோகம்... விபத்தில் பலியான முன்னாள் அமைச்சரின் பேத்தி.. தலைவர்கள் இரங்கல்
RCB Vs SRH: முதலிடத்தை பிடிக்குமா ஆர்சிபி? ஷாக் கொடுக்குமா ஐதராபாத் - லக்னோ செய்த சம்பவம், குஷியில் 3 அணிகள்
RCB Vs SRH: முதலிடத்தை பிடிக்குமா ஆர்சிபி? ஷாக் கொடுக்குமா ஐதராபாத் - லக்னோ செய்த சம்பவம், குஷியில் 3 அணிகள்
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
Embed widget