மேலும் அறிய

திருச்சியில் மது போதையில் பேருந்தை மறித்து ரகளை - தடுக்க சென்ற எஸ்.ஐக்கு கத்திக்குத்து...!

’’சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவற்றின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைப்பு’’

திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (45). இவர் தினமும் மது அருந்திவிட்டு ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவர் குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குடிபோதையில் சோமரசன்பேட்டை அடுத்துள்ள சுண்ணாம்புகாரப்பட்டி நேற்று மாலை சாலை நடுவில் மதுபோதையில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி  தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்ப்பட்டது. யார் தடுக்க முயன்றாலும் அவர்களை கத்தியை வைத்து மிரட்டி வந்தார். அதனால் யாரும் அருகில் செல்ல தயக்கத்துடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் வந்த பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். இதனை  கண்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பற்ற வைத்த தீயை அனைத்து அவரை  சமாதானப்படுத்தினர். ஆனால் அந்த நபர்  மதுபோதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தன்னைத்தானே கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்றார். இதனால் அருகில் இருந்த  மக்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர் கத்தியால் மிரட்டுவதால் அனைவரும்  என்ன செய்வது என்று அச்சத்தில் நின்றனர்.


திருச்சியில் மது போதையில் பேருந்தை மறித்து ரகளை - தடுக்க சென்ற எஸ்.ஐக்கு கத்திக்குத்து...!

மது போதையில் நிற்க நிதானம் இல்லாமல் மதுபோதையில் சாந்தகுமார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து பிரதான  சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவற்றின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மக்கள் அவரை தடுக்க முயற்சி செய்தபோது இவர் கத்தியை கொண்டு மிரட்டியதால் அனைவரும் அருகில் செல்ல அச்சம் உடன் இருந்தனர் என்ற பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. பின்பு மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தன் பெயரில் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறை பொறுமையாக எவ்வளவோ எடுத்து சொல்லியும் சாந்தகுமார் மது போதையில் இருந்ததால் அவர் காவல்துறையிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். மேலும்  சாந்தகுமார் மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பொது இடத்தில் இதுபோன்று நடந்து கொள்வது மிகவும் தவறு என காவல்துறையினரும், பொதுமக்களும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர் தொடர்ந்து கையில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கிழித்துக்கொண்டு மிரட்டி உள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


திருச்சியில் மது போதையில் பேருந்தை மறித்து ரகளை - தடுக்க சென்ற எஸ்.ஐக்கு கத்திக்குத்து...!


மேலும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் கார்த்தி , சாந்தகுமாரை பிடிக்க முயன்றார்,அப்போது மது போதையில் இருந்த சாந்தகுமார் தனது கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் கார்த்திகை குத்தினார். இதில் கார்த்திக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர். பின்னர்  சாந்தகுமாரும்,  காயமடைந்த உதவி ஆய்வாளர் கார்த்தி இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Car Loans: கார் லோன் வாங்கனுமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு EMI?
Car Loans: கார் லோன் வாங்கனுமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு EMI?
மதுரையில் நாளை (16.12.2025) மின்தடை.. முழு லிஸ்ட் வந்திருச்சு, ஒரு நிமிடம் பாருங்க !
மதுரையில் நாளை (16.12.2025) மின்தடை.. முழு லிஸ்ட் வந்திருச்சு, ஒரு நிமிடம் பாருங்க !
மார்கழி மாத ராசி பலன் 2025 - துலாம் ராசி
மார்கழி மாத ராசி பலன் 2025 - துலாம் ராசி
Embed widget