மேலும் அறிய

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி - முதலிடத்தில் அரியலூர்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்ததாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் 31, 2023க்குள் இப்பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், www.nvsp.in, voters portal என்ற இணையதளத்தைப் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்தியாவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ளது. பேரூராட்சி,ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் 1 வார்டில் இருக்கும் வாக்காளரின் பெயர் 6, 7 என இரண்டிற்கும் மேற்பட்ட வார்டுகளில் இருக்கும். வாக்களிக்கச் செல்லும் போது தான் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும்? என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படுகிறது. இதோடு அரசியல் கட்சியினரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு போலி வாக்குகளைப் போடுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து தொடங்கியது. இப்பணிகளை வருகின்ற மார்ச் 31, 2023க்குள் முடிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டது. 


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்  இணைக்கும் பணி  -  முதலிடத்தில் அரியலூர்

இதனை தொடர்ந்து மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல், voter helpline app என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.போலி வாக்காளர்களைக் கண்டறிய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ள ஒரு வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்க்கொண்டது.


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்  இணைக்கும் பணி  -  முதலிடத்தில் அரியலூர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை கண்டறிந்து நீக்கவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து  தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி தொடங்கப்பட்டதில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதின் அடிப்படையில் மாநில அளவில் அரியலூர் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 546 பேரில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 340 வாக்காளர்கள் (72.96 சதவீதம்) தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். இதற்காக அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் கலெக்டர் ரமணசரஸ்வதி பாராட்டு தெரிவித்தார். 100 சதவீதம் பணியை முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் -  தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் - தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் -  தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் - தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
9 மாதம்.. 3 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு...தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!
9 மாதம்.. 3 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு...தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!
ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
Embed widget