மேலும் அறிய

கணவனை கொன்று புதைத்துவிட்டு 11ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி உட்பட 3 பேர் கைது

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று இரவில் தகராறு செய்தபோது ஆத்திரத்தில் தள்ளிவிட்டதில் அவரது தலையில் அடிபட்டு இறந்துவிட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன், இவருக்கு லட்சுமி என்ற மகளும், குணசேகரன் (வயது 35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கூலித்தொழிலாளியான குணசேகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த மகாராஜனின் மகள் ஜெயந்திக்கும் திருமணமாகி தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் லட்சுமிக்கு திருமணமாகி காட்டுமன்னார்கோவிலில் வசித்த நிலையில், அவரது கணவர் இறந்தபின்னர், ஊருக்கு திரும்பி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு செந்தாமரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குணசேகரன் மற்றும் அவரது மைத்துனர் சங்கர் ஆகியோர் மீது குவாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில்  நடந்த இந்த வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம்  உத்தரவிட்டது. அப்போது இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் மட்டுமே நீதி மன்றத்தில் ஆஜரானார். ஆனால் குணசேகரன் ஆஜராகவில்லை.
 

கணவனை கொன்று புதைத்துவிட்டு 11ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி உட்பட 3 பேர் கைது
 
இதையடுத்து லட்சுமி பல இடங்களில் தேடியும் குணசேகரனை தொடர்பு கொள்ளவோ, பார்க்கவோ முடியாமல் இருந்துள்ளார். ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், குணசேகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊரில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 4ஆம்  தேதி லட்சுமி, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தனது தம்பியை பல ஆண்டுகளாக காணவில்லை. அவரது மனைவியான ஜெயந்தியிடம் கேட்டபோது, கேரளாவில் இருப்பதாகவும், அவ்வப்போது போனில் தொடர்பு கொள்வதாகவும், கூறினார். ஆனால் குணசேகரனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. எனவே எனது தம்பியை கண்டுபிடித்து தர வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் காவல்துறை தனிப்படை அமைத்து ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பேசி வந்தார். பின்னர் மீண்டும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குணசேகரன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதும், பின்னர் எரிக்கப்பட்டதும் தெரியவந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஜெயந்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகையில், கொலை வழக்கு காரணமாக எனது கணவர் கேரளாவில் சில காலம் தலைமறைவாக இருந்தார். அப்போது காவல்துறையினர்  அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்துவிட்டு சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பிய எனது கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார் என்றார்.
 

கணவனை கொன்று புதைத்துவிட்டு 11ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி உட்பட 3 பேர் கைது
 
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று இரவில் தகராறு செய்தபோது ஆத்திரத்தில் தள்ளிவிட்டதில் அவரது தலையில் அடிபட்டு இறந்துவிட்டார். இதையடுத்து எனது சகோதரி ஜோதி, தந்தை மகாராஜன் ஆகியோர் உதவியுடன் குணசேகரனின் உடலை வீட்டிற்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்துவிட்டோம். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் சிலரின் ஆலோசனையின்படி, குணசேகரனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து எலும்புகளை எரித்து சாம்பலை ஏரி தண்ணீரில் கரைத்து விட்டோம். பின்னர் நிம்மதியாக இருந்து வந்தோம், என்று ஜெயந்தி தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.
 
இதையடுத்து காவல்துறை ஜெயந்தி (37), கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அக்காள் ஜோதி (40), தந்தை மகாராஜன் (70) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  மேலும் கணவரை கொலை செய்துவிட்டு, அவர் கேரளாவில் இருப்பதாக நாடகமாடிய பெண் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget