மேலும் அறிய

மனநிலை பாதிக்கபட்ட மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தாய் கைது

திருச்சியில் மனநிலை பாதித்து தொல்லை கொடுத்து வந்த மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தாய் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.

திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் 7 வது மெயின் ரோடு 10வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவருடைய மனைவி புனிதா (58) இவர்களுக்கு சாந்தினி என்ற மகளும் விஜயராகவன் (27) என்ற மகனும் உள்ளனர் கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் பத்மநாபன் இறந்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.  இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 7 மாதங்கள் ஒரு மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக தில்லை நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் அவரும் தாய் புனிதா மட்டுமே இருந்துள்ளனர். இந்த  நிலையில் இரவு விஜயராகவன் அவரது தாயாரும் அறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்,  அதிகாலை 5 மணி அளவில் விஜயராகவன் திடீரென எழுந்து தனது தாயாரை வெளியே சென்று படுக்கும் படி கூறியுள்ளார் அவரும் ஹாலுக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். பின்பு  சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று கதவை திறந்துள்ளார்,  அங்கு விஜயராகவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 


மனநிலை பாதிக்கபட்ட மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தாய் கைது

மேலும் அவரின் தலையில் கத்தியால் மூன்று முறை ஆழமாக குத்தப்பட்டு காயம் இருந்ததும் இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் புனிதா உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் விஜயராகவனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து உள்ளார் என்பதை தெரிவித்துள்ளனர்.  உடனடியாக உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்..பின்னர் விஜயராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் அவரது தாயிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டு விஜயராகவன் ஏற்கனவே இது இதுபோன்று ஏழு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார், தற்போது எட்டாவது முறையாக கத்தியால் பின்னந்தலையில் குத்தி தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்..


மனநிலை பாதிக்கபட்ட மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தாய் கைது

இந்நிலையில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனையில் விஜயராகவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையிடம் அறிக்கை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர்  விஜயராகவனின் தாய் புனிதா மீது சந்தேகப்பார்வை விழுந்தது. தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் மகனை கொன்று விட்டு தாய் நாடகமாடியது அம்பலம் ஆனது. இதையடுத்து புனிதாவை கைது செய்த காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்கு மூலத்தில்,  தன்னுடைய மகன் விஜயராகவன் கடந்த சில தினங்களாக தனக்கு பல்வேறு ரீதியில் தொல்லை கொடுத்து வந்ததால் நான் தான் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட புனிதா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
Embed widget