மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் 8 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

’’டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து வசதிகளும் செய்து 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’’

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள் நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எறும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு, உட்பட 16 வார்டுகள் உள்ளன. மேலும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 16 நோய்களுக்கான வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை மருத்துவம், கிட்னி அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் (கேஸ்ட்ரோ) நோய்க்கான அறுவை சிகிச்சை மருத்துவம், ஆர்த்தோ அறுவை சிகிச்சை, ஆகியவை துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு டயாலிசிஸ் நோய்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.


திருச்சி மாவட்டத்தில் 8 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

பருவமழை துவங்கிய நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது எனவும்,  அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  அதன்படி தற்போது கொரோனா இரண்டாவது அலையின்  தாக்கத்தை அரசு திறமையாக கையாண்டு குறைத்து வருகிறது. இதில் தற்போது மழைக்கால நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு முற்றிலும்  தயாராக வைக்கப்பட்டுள்ளது மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பருவமழை தொடங்கிய சில நாட்களில் 8 நபர்களுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் 8 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில், மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காலம் துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கையாக டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து வசதிகளும் செய்து 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில், மாநகராட்சி ஊழியர் உடன் மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே திருச்சி மாநகர மாவட்ட பொது மக்கள் எவ்வித பயமுமின்றி,  மழைகாலத்தில் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் வருவது வழக்கமான ஒன்று தான் ஆகையால் மக்கள் அதை பற்றி அச்சம் படவேண்டிய அவசியமில்லை. திருச்சி மாநகராட்சியும், மருத்துவ குழுவும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் உடலில் எந்தவிதமான ஒரு அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget