மேலும் அறிய

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது பள்ளி மானவ, மாணவிகளுக்கு நேற்று ஒரேநாளில் 8,303 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது. அதே சமயம் வரும் ஜீன் மாதம் இறுதியில் கொரோனா 4 ஆவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதரதுறை அதிகரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தி உள்ளது மாநில அரசு. கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கோர்பிவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கியது.
 

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
 
இதனை தொடர்ந்து  அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பள்ளிகள், 39 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 41 பள்ளிகள், 29 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் ரமணசரஸ்வதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி முன்னிலையில் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
 
அதே போல் பெரம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும்  அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 12 முதல் 14 வயது வரையில் 7, 8, 9-ம் வகுப்புகள் பயிலும் மாணவ-மாணவிகள் மொத்தம் 22,100 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 24,800 மாணவ-மாணவிகளுக்கும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதல் நாளான நேற்று நடந்த முகாம்களில் அரியலூர் மாவட்டத்தில்  2,273 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5,030 பேருக்கும் என மொத்தம் 8,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
 
மேலும், கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். எனவே, மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. முதல் தவணை கோர்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 12 முதல் 14 வயது வரையிலான மாணவ மாணவிகள் 4 வாரங்களுக்கு பிறகு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget