மேலும் அறிய

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது பள்ளி மானவ, மாணவிகளுக்கு நேற்று ஒரேநாளில் 8,303 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது. அதே சமயம் வரும் ஜீன் மாதம் இறுதியில் கொரோனா 4 ஆவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதரதுறை அதிகரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தி உள்ளது மாநில அரசு. கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கோர்பிவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கியது.
 

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
 
இதனை தொடர்ந்து  அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பள்ளிகள், 39 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 41 பள்ளிகள், 29 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் ரமணசரஸ்வதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி முன்னிலையில் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
 
அதே போல் பெரம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும்  அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 12 முதல் 14 வயது வரையில் 7, 8, 9-ம் வகுப்புகள் பயிலும் மாணவ-மாணவிகள் மொத்தம் 22,100 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 24,800 மாணவ-மாணவிகளுக்கும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதல் நாளான நேற்று நடந்த முகாம்களில் அரியலூர் மாவட்டத்தில்  2,273 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5,030 பேருக்கும் என மொத்தம் 8,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
 
மேலும், கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். எனவே, மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. முதல் தவணை கோர்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 12 முதல் 14 வயது வரையிலான மாணவ மாணவிகள் 4 வாரங்களுக்கு பிறகு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget