மேலும் அறிய

திருச்சியில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோ பறிமுதல்

75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை நடத்தியதில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகள் இயங்கக்கூடிய சாலைகளில் ஆட்டோக்கள், அதிகளவில் இயக்கப்படுவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்லும் அவல நிலை இருக்கிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. ஆகையால் இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், மேலும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை, ஆகையால் தான் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது< என புகார்கள் எழுந்து வருகிறது.  ஆகையால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் ஆட்டோவின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


திருச்சியில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோ பறிமுதல்

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமதுமீரான் ஆகியோர் நேற்று  காலை ஸ்ரீரங்கம் மேலூர்ரோடு அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற 75 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஆட்டோக்களில் தகுதிச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத ஆட்டோக்கள், அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாகனங்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்.. முறையான ஆவணங்கள் இல்லாமல் இனிவரும் காலங்களில் ஆட்டோக்கள் இயங்கக் கூடாது, அவ்வாறு விதிமுறைகளை மீறி இயக்கினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இனி இது போன்ற புகார்கள் வராத வண்ணம் அதிகாரிகள் பணி ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.



தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget