மேலும் அறிய

திருச்சியில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோ பறிமுதல்

75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை நடத்தியதில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகள் இயங்கக்கூடிய சாலைகளில் ஆட்டோக்கள், அதிகளவில் இயக்கப்படுவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்லும் அவல நிலை இருக்கிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. ஆகையால் இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், மேலும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை, ஆகையால் தான் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது< என புகார்கள் எழுந்து வருகிறது.  ஆகையால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் ஆட்டோவின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


திருச்சியில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோ பறிமுதல்

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமதுமீரான் ஆகியோர் நேற்று  காலை ஸ்ரீரங்கம் மேலூர்ரோடு அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற 75 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஆட்டோக்களில் தகுதிச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத ஆட்டோக்கள், அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாகனங்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்.. முறையான ஆவணங்கள் இல்லாமல் இனிவரும் காலங்களில் ஆட்டோக்கள் இயங்கக் கூடாது, அவ்வாறு விதிமுறைகளை மீறி இயக்கினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இனி இது போன்ற புகார்கள் வராத வண்ணம் அதிகாரிகள் பணி ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.



மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget