மேலும் அறிய

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உலக வரலாற்றிலேயே ஒரு கோடி நோயாளிகளுக்கு  இல்லம் தேடி சென்று சிகிச்சை அளிப்பது இதுவே முதன் முறையாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 6-வது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கலந்துக் கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அளித்து சிறப்புரையாற்றினார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:


திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6-வது பட்டமளிப்பு விழா சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 98 இளங்கலை மருத்துவ மாணவ, மாணவிகள் பட்டங்களை பெறுகின்றனர். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ 7.35 கோடி செலவில் 13 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவு செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரணி அரசு மருத்துவ மனையில் சிடி ஸ்கேன் கருவி தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ரூ 83.88 கோடி செலவில் 30 புதிய மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.


டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Cath Lab De-Addiction Centre ஆகியவை அமையவிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ துறையில் 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் எம்ஆர்பி சார்பில் கலந்தாய்வு மூலம் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 977 செவிலியர் பணியிடங்கள் மற்றும் 400 மேற்பட்ட மருந்தாளுனர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மருத்துவ துறைக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் நோயாளிகளின் இல்லம் தேடி சென்று பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இத்திட்டத்தின் வாயிலாக ஒரு கோடி நோயாளிகள் பயனடைகின்றனர்.


டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விபத்தில் காயமடைந்தவரை  மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவரக்கு  ஊக்கத்தொகை  ரூ.5000 வழங்கப்படும் 

 

உலக வரலாற்றிலேயே ஒரு கோடி நோயாளிகளுக்கு  இல்லம் தேடி சென்று சிகிச்சை அளிப்பது இதுவே முதன் முறையாகும். மேலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் -48 திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக 694 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 கோடியே 54 ஆயிரத்து 256 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 221 கோடியே 11 இலட்சம் இதுவரை செலவிடப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக  5000-காசோலை வழங்கப்படுகிறது. இது உலக அளவில் சிறப்பான திட்டம் ஆகும். மேலும் இதயம் காக்கும் நடப்போம் நலம்பெறுவோம் திட்டம் சிறுநீரக காப்போம் மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் மற்றும் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.


டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை

இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை மாரடைப்பு முன் அறிகுறியுடன் வந்து பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 43 நபர்களும், துணை சுகாதார நிலையங்களில் 519 நபர்கள்  பயனடைந்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு மருத்துவ துறையில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும். நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை ஆகும். பட்டம் பெறும் மாணவ மாணவிகளை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, துணை வேந்தர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழகம் கே.நாராயணசாமி, இயக்குநர் மருத்துவக்ககல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் மரு. ஜே.சங்குமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget