அபிடவிட்டில் தில்லுமுல்லு? - எ.வ. வேலுவின் மனுவை தள்ளுபடி செய்ய தவெக வேட்பாளர் அதிரடி கோரிக்கை
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்று விட்டாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் - திருவண்ணாமலை தமிழக வெற்றி கழக வேட்பாளர் உறுதி

வேட்பு மனுத்தாக்கலின்போது அபிடவிட் சான்றில் பல்வேறு குளறுபடிகளை எ.வ. வேலு செய்துள்ளார் என்றும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றும் தவெக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் வேட்பாளராக நின்ற அருள் ஆறுமுகம் தெரிவித்தார்.
திருவண்ணாமலை காந்தி சிலையின் முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தங்களுக்கு வாக்குகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் தபால் ஓட்டுக்களில் திமுக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தேர்தலில் போட்டியிட அளித்த அபிடவிட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் குறிப்பாக தபால் ஓட்டுக்களில் பல்வேறு முறைகேடுகளில் திமுகவினர் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் செயல்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றத்தில்தான் என்றும் கவர்னர் இடம் இல்லை என்றும் இதில் வேண்டுமென்றே பாஜக விஜய் அவர்களை ஆட்சியில் அமர வைக்க கூடாது என்ற நோக்கில் அரசியல் தந்திரத்தை கவர்னர் மூலம் செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், எங்களின் வாக்குறுதிபடி திருவண்ணாமலை பொதுமக்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அது மட்டும் இன்றி தாங்கள் அளித்த வாக்குறுதிகளை இந்த சட்டமன்றத் தொகுதியில் கண்டிப்பாக தங்கள் கட்சி ஆட்சி அமைத்து உடன் நிறைவேற்றுவோம் என்றும் அருள் ஆறுமுகம் தெரிவித்தார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















