மேலும் அறிய

“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் தான். தூத்துக்குடி மாவட்டத்தில் 408 சுதந்திர  போராட்ட வீரர்கள்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கப்போகும் நாளைய தலைவர்கள் மாணவர்கள் தான். எனவே, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்-அமைச்சர் கீதாஜீவன்.


“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை அலுவலகம் சார்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 5 நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தூத்துக்குடி வஉசி கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமை வகித்தார்கள். விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசும்போது, ”தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் தான். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 408 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்ததாக அரசிதழில் உள்ளது.அவர்களில் நிறைய பேரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது. தூத்துக்குடி நடைபெற்ற புத்தக கண்காட்சியின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அறியப்படாத தியாகிகள் குறித்து ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்

போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் மாணவ, மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் பருவத்தில் தான் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். எந்த பொறுப்புகளும் கிடையாது, கவலைகளும் கிடையாது. அனைத்தையும் பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள். எனவே, இந்த காலத்தில் தான் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயன்படுத்தி கற்றுக் கொள்ள வேண்டும். தட்டச்சு, கணினி, கைத்தொழில் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். பல தடைகள், சோதனைகள் வரலாம். தடைகற்களை படிகற்களாகவும், சோதனைகளை சாதனைகளாகவும் மாற்ற வேண்டும். மாணவர்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படியுங்கள், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். பாட புத்தகங்களை தாண்டி அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அது உங்களது அறிவாற்றலை, சிந்திக்கும் திறனை வளர்க்கும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.


“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ தலைவர்கள் சிறைபட்டு, உயிர்நீத்து கஷ்டப்பட்டு சுதந்திரத்தை வாங்கித் தந்துள்ளனர். அதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கப்போகும் நாளைய தலைவர்கள் நீங்கள் தான்” என்றார்.


“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது, ”தமிழகத்தில் அதிக சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்வோம். சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம். ஒரே நாளில் யாரும் சாதனையாளராக மாறிவிட வேண்டும். சாதனையாளராக வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நாம் எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது” என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு, மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் .சரஸ்வதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Embed widget