மேலும் அறிய

Crime: பல் பிடுங்கிய ஏ.எஸ்.பி.; 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. - காவல் நிலையத்தில் நேரில் ஆய்வு செய்த அதிகாரி

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி. மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

4 பிரிவுகளின் கீழ் வழக்கு:

பின் அந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இதனிடையே குற்றச்சாட்டுக்கு ஆளான ஏஎஸ்பி பல்வீர்சிங் பணி இடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சி பி சி ஐ டி போலீசார் குற்ற எண் 03/2023 கீழ் 323, 324, 326, 506/1 என அதே நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நான்கு பிரிவின் கீழ்  ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் சிலர் என குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்  சிபிசிஐடி வழக்கு விசாரணை அதிகாரியாக உலகராணி என்பவர் நியமிக்கப்பட்டார். 

தொடர்ந்து நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியும், விசாரணை அதிகாரமான பொன்ரகு பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் முறைப்படி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தார். ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஆய்வாளர் உலக ராணி  நேற்று மதியம் 12 மணிக்கு பெற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை தொடங்கினார்.


Crime: பல் பிடுங்கிய ஏ.எஸ்.பி.; 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. - காவல் நிலையத்தில் நேரில் ஆய்வு செய்த அதிகாரி

தொடரும் விசாரணை:

அதைத்தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு மேல் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடையவியல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சீனியம்மாள் தலைமையிலான தடையவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தினர். மேலும் போட்டோ மற்றும் வீடியோ மூலமாகவும் அவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget