மேலும் அறிய

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

வல்லநாடு பாலத்தில் தற்போது வரை ஒரு பகுதியில் கூட பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும் என தெரியவில்லை.

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 4 வழிச்சாலையில் முறப்பநாடு அருகே வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குறுக்கே மிக பிரம்மாண்டமான பாலம் ஒன்று 2012 ல் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட ஆரம்பம் முதலே பாலம் முறையான கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில் பாலம் கட்டப்பட்டது முதல் தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை விரிசல் ஏற்பட்டு சேதம் அடைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

இதற்கிடையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரூபாய் 13 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. கடந்த 2017 முதல் இந்த பாலத்தில் சீரமைப்பு பணிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்தே பாலத்தின் பணிகளால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

 

கடந்த 2017 முதல் கடந்த மாதம் வரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பாட்டில் இருந்து நாணல்காடு வரையில் மொத்தமாக 28 விபத்துக்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரவு நேரம் மட்டும் 9 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி & திருநெல்வேலி நான்குவழிச்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில இந்த அறிக்கை தற்போது வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைபெறும் சாலையில் விபத்துக்களை குறைத்து உயிரிழப்புகளை தடுக்க சாலை நடுவே தண்ணீர் தடுப்பு அரண்(water Barry guard) அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும். இந்த ஒரு வழிப்பாதை தொடங்கும் சாலையின் 1 கிலோ மீட்டர் முன்பே எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் விபத்து நடைபெறுவதால் போக்குவரத்து மாற்ற மின்னணு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். வல்லநாடு பாலத்தில் தற்போது வரை ஒரு பகுதியில் கூட பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும் என தெரியவில்லை. வல்லநாடு பாலத்தின் சீரமைப்பு பணியால் 11 உயிரிழப்புகள் நடந்துள்ளதால் மீண்டும் விபத்துக்கள் நடந்து ஒரு உயிர்சேதம் ஏற்படும் முன்பே எந்த விபத்துக்களும் நடக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன் என்கிறார் சுகன் கிறிஸ்டோபர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Embed widget