மேலும் அறிய

பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

’’கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி என மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 1500 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது’’

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம், சிப்காட் விரிவாக்கம்  15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் என நாளுக்கு நாள் தூத்துக்குடி நகரின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி உள்ளிட்ட சரக்குகள் போக்குவரத்தை எளிதாக கையாளுவது, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களை ரயில் மூலம் கொண்டு செல்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி - மதுரை இடையே புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு 144 கிலோமீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு  நிதி  ஒதுக்க கோரிக்கை
முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு கடந்த பத்தாண்டுகளில் வெறும் 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டுமே பணிகள் முடிவுற்று அண்மையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, வரையிலும் மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் என மீதமுள்ள 127 கிலோ மீட்டருக்கான  பணிகள் நிதி ஒதுக்கீடு  இல்லாமல் கிடப்பில் உள்ளது.


பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு  நிதி  ஒதுக்க கோரிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் பல ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடி நகரமே காற்று மாசு உள்ளிட்ட அனைத்து வகை  சுற்றுச்சூழல் பாதிப்பில் முன்னணியில் உள்ளது. தூத்துக்குடி மதுரை ரயில்வே வழித்தடம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ரயில்வே துறைக்கும் பல ஆயிரம் கோடி வருமானமும் கிடைக்கும். மேலும் தென் தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளான விளாத்திகுளம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதாக வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்ய இயலும்.

பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு  நிதி  ஒதுக்க கோரிக்கை

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி என மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 1500 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இதுவரை உரிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் 90 சதவீத பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆகவே பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்துக்கு இரண்டாம் கட்ட பணிகளுக்கு  உரிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுவதை விட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்பாதை பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக பட்ஜெட்டில் வழிவகை காண வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக  உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
Embed widget