மேலும் அறிய

பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

’’கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி என மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 1500 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது’’

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம், சிப்காட் விரிவாக்கம்  15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் என நாளுக்கு நாள் தூத்துக்குடி நகரின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி உள்ளிட்ட சரக்குகள் போக்குவரத்தை எளிதாக கையாளுவது, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களை ரயில் மூலம் கொண்டு செல்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி - மதுரை இடையே புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு 144 கிலோமீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு  நிதி  ஒதுக்க கோரிக்கை
முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு கடந்த பத்தாண்டுகளில் வெறும் 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டுமே பணிகள் முடிவுற்று அண்மையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, வரையிலும் மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் என மீதமுள்ள 127 கிலோ மீட்டருக்கான  பணிகள் நிதி ஒதுக்கீடு  இல்லாமல் கிடப்பில் உள்ளது.


பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு  நிதி  ஒதுக்க கோரிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் பல ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடி நகரமே காற்று மாசு உள்ளிட்ட அனைத்து வகை  சுற்றுச்சூழல் பாதிப்பில் முன்னணியில் உள்ளது. தூத்துக்குடி மதுரை ரயில்வே வழித்தடம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ரயில்வே துறைக்கும் பல ஆயிரம் கோடி வருமானமும் கிடைக்கும். மேலும் தென் தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளான விளாத்திகுளம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதாக வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்ய இயலும்.

பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு  நிதி  ஒதுக்க கோரிக்கை

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி என மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 1500 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இதுவரை உரிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் 90 சதவீத பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆகவே பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்துக்கு இரண்டாம் கட்ட பணிகளுக்கு  உரிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுவதை விட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்பாதை பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக பட்ஜெட்டில் வழிவகை காண வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக  உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget