மேலும் அறிய

திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!

இந்தாண்டில் மட்டும் 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தாண்டில் மட்டும் 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!

2013-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய அம்பாசமுத்திரம், பிரம்மதேசத்தை சேர்ந்த மாயபெருமாள் (வயது 60), ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் 9 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அவரை கைது செய்து, திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்குறிப்பிட்ட நபருக்கு 2019-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கிலும் பிடிவாரண்டு நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராதாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி சுரேஷ்(52), 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்(40), 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், நவீன தொழில்நுட்ப உதவியுடன் கர்நாடகாவில் இருப்பது கண்டறியப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர். 2001-ம் ஆண்டு குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய தாமஸ்(64), திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவில் இருந்து கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!

அதேபோல், 2023-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பொன்ராஜ்(26) மும்பையில் தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினர் அங்கு சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 2010-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் தொடர்புடைய சஞ்சய்கிருஷ்ணா சேத்துவால்(54), 1 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மகாராஷ்டிரா சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கண்டறிய, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்  தமிழகத்திற்குள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் சென்று நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண, நவீன தொழில்நுட்ப உதவியுடன் காவல்துறையினர் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Ajith Seeman: “நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
“நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
Embed widget