மேலும் அறிய

நெல்லையில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி..கண்ணில் தென்படுகிற பறவைகளை க்ளிக் செய்த வனத்துறை

இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பர்

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் குளக்கரைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். வற்றாத ஜீவ  நதியான தாமிரபரணி, அதன் துணையாறுகள் மற்றும் பாசனக்குளங்கள் மூலம் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் செழிப்புறுகின்றது. இந்த பாசனக்குளங்களில் எண்ணற்ற நீர்வாழ் பறவைகள் குறிப்பாக குளிர் காலங்களில் இக்குளங்கள் பறவைகளுக்கு புகலிடமாக திகழும், இக்காலங்களில் வெளியூர்களில் இருந்தும் வலசை வரும் பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சு பொறித்து தன் இனத்தை பெருக்கிக் கொள்ளும். இவ்வாறு வரும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பது உண்டு, அதன்படி இதுவரை நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்றும் நாளையும் நடைபெறும் என நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தமிழ்நாடு வனத்துறை  மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், காடன்குளம், திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம், அரமண நேரி, இராம நேரி, டானார் குளம், சிலையம், விஜய நாராயணம், வேய்ந்தான்குளம், நயினார் குளம், வண்ணாமாசேரி, பாலாமடை, ராஜவல்லிபுரம், குப்பக்குறிச்சி, கல்குறிச்சி, கண்டியப்பேரி, கங்கை கொண்டான், சாரல்குளம், முக்கூடல், பிராஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு குளங்களிலிம் அதே போல தென்காசியில் உள்ள குளங்களிலும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தார்.


நெல்லையில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி..கண்ணில் தென்படுகிற பறவைகளை க்ளிக் செய்த வனத்துறை

இச்சூழலில் நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி பகுதியில் உள்ள குளங்களில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. இதில் திருக்குறுங்குடி வனத்துறை சார்பில் திருக்குறுங்குடி பெரியகுளம், மலையடிபுதூர், செங்களாகுறிச்சி, வடுகச்சிமதில், சூரங்குடி ஊச்சிகுளம் உள்ளிட்ட ஆறு கிராமங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் கண்களில் தென்படுகிற அனைத்து பறவைகளையும் தொலைநோக்கி கருவியுடன் புகைப்படம் எடுப்பதுடன் அதனை படமாகவும் பதிவு செய்தனர் . 

தொடர்ந்து நாளை ரோஸ்மியாபுரம், கொடுமுடியாறு அணை, வள்ளியூர் குளம், கேசவனேரி குளம், ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று பறவைகள் கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
Embed widget