மேலும் அறிய

Tirunelveli Murder: டென்சனான நீதிமன்றம்: ”திருநெல்வேலி நீதிமன்றத்திற்கருகே கொலை” காரணம் என்ன?

Nellai Murder: ”கடந்த 24 மணி நேரத்தில் 4 கத்திக்குத்து ” சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், என்ன நடந்தது? எதனால் நடந்தது? நீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். 

நீதிமன்றத்திற்கு அருகே கொலை:

இன்று காலைசுமார் 8 மணியளவில், 24 வயதுடையாக கூறப்படும் மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்திருக்கிறார். அப்போது, காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பலானது, மாயாண்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. 

இதையடுத்து, காரிலிருந்து இறங்கி மாயாண்டியை துரத்திச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அவரது ஒரு கை மற்றும் இரு கால்களும் துண்டாகின. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஒருவரை கைது செய்தனர்.


Tirunelveli Murder: டென்சனான நீதிமன்றம்: ”திருநெல்வேலி நீதிமன்றத்திற்கருகே கொலை” காரணம் என்ன?

மீதமுள்ள 3 பேர் காரிலிருந்து தப்பித்துச் சென்றனர்.  திடீரென மாயாண்டியை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் , இந்த கொலை சம்பவமானது நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது தப்பித்துச் சென்ற மூவரும் காவல்துறையிடம் சரணடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

6 பேர் கைது?

இந்த கொலை சம்பவத்தில் மனோராஜ் (27), தங்கமகேஷ் (19), சிவா (19), சுந்தரலிங்கம் (19)  ஆகிய 6 நபர்கள் ஈடுபட்டதாகவும் , 4 பேரும்  கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்கள் வந்த காரில் மொத்தம் 6 பேர் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  மாலை நிலவரப்படி 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

எதற்காக கொலை?

இந்த கொலை சம்பவமானது, முன்பகை என்றும் சாதிய மோதல் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை வழக்கில், இன்று கொலை செய்யப்பட்ட மாயாண்டி என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இன்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டம் தீட்டி ராஜாமணி உறவினர்கள் கொலைசெய்துள்ளனர். 

நீதிமன்றம் சரமாரி கேள்வி:

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே , ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு, தாமாக விசாரணைக்கு எடுத்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்,  நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தர, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் , காவல்துறைதரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார், “ நீதிமன்ற வளாகத்தில் , காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தபோது, ஏன் கொலையை தடுக்கவில்லை?; கொலையை தடுப்பதற்கு பதிலாக , தேடி வருவதாக கூறுவதா என கேள்வி எழுப்பினார்.

அப்போது, காவல்துறை சார்பில், கொலை நடந்தபோது ஒருவர் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில்சட்டம் ஒழுங்கு குறித்து, எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஓசூரில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொலைச் சம்பவம், தஞ்சையில் பள்ளிக் கூடத்திற்குள் சென்று ஆசிரியர் படுகொலை நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இபிஎஸ் கேள்வி:


Tirunelveli Murder: டென்சனான நீதிமன்றம்: ”திருநெல்வேலி நீதிமன்றத்திற்கருகே கொலை” காரணம் என்ன?

 

இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், ●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு

●சிவகங்கையில் தாயின்கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை

●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில்5 பேருக்கு கத்திக்குத்து.

தனிப்பட்ட கொலைகள்"என்று இன்னும் எத்தனை நாட்கள்தான்  திமுக அரசுசட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget