மேலும் அறிய

Tirunelveli Murder: டென்சனான நீதிமன்றம்: ”திருநெல்வேலி நீதிமன்றத்திற்கருகே கொலை” காரணம் என்ன?

Nellai Murder: ”கடந்த 24 மணி நேரத்தில் 4 கத்திக்குத்து ” சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், என்ன நடந்தது? எதனால் நடந்தது? நீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். 

நீதிமன்றத்திற்கு அருகே கொலை:

இன்று காலைசுமார் 8 மணியளவில், 24 வயதுடையாக கூறப்படும் மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்திருக்கிறார். அப்போது, காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பலானது, மாயாண்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. 

இதையடுத்து, காரிலிருந்து இறங்கி மாயாண்டியை துரத்திச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அவரது ஒரு கை மற்றும் இரு கால்களும் துண்டாகின. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஒருவரை கைது செய்தனர்.


Tirunelveli Murder: டென்சனான நீதிமன்றம்: ”திருநெல்வேலி நீதிமன்றத்திற்கருகே கொலை” காரணம் என்ன?

மீதமுள்ள 3 பேர் காரிலிருந்து தப்பித்துச் சென்றனர்.  திடீரென மாயாண்டியை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் , இந்த கொலை சம்பவமானது நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது தப்பித்துச் சென்ற மூவரும் காவல்துறையிடம் சரணடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

6 பேர் கைது?

இந்த கொலை சம்பவத்தில் மனோராஜ் (27), தங்கமகேஷ் (19), சிவா (19), சுந்தரலிங்கம் (19)  ஆகிய 6 நபர்கள் ஈடுபட்டதாகவும் , 4 பேரும்  கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்கள் வந்த காரில் மொத்தம் 6 பேர் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  மாலை நிலவரப்படி 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

எதற்காக கொலை?

இந்த கொலை சம்பவமானது, முன்பகை என்றும் சாதிய மோதல் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை வழக்கில், இன்று கொலை செய்யப்பட்ட மாயாண்டி என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இன்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டம் தீட்டி ராஜாமணி உறவினர்கள் கொலைசெய்துள்ளனர். 

நீதிமன்றம் சரமாரி கேள்வி:

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே , ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு, தாமாக விசாரணைக்கு எடுத்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்,  நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தர, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் , காவல்துறைதரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார், “ நீதிமன்ற வளாகத்தில் , காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தபோது, ஏன் கொலையை தடுக்கவில்லை?; கொலையை தடுப்பதற்கு பதிலாக , தேடி வருவதாக கூறுவதா என கேள்வி எழுப்பினார்.

அப்போது, காவல்துறை சார்பில், கொலை நடந்தபோது ஒருவர் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில்சட்டம் ஒழுங்கு குறித்து, எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஓசூரில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொலைச் சம்பவம், தஞ்சையில் பள்ளிக் கூடத்திற்குள் சென்று ஆசிரியர் படுகொலை நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இபிஎஸ் கேள்வி:


Tirunelveli Murder: டென்சனான நீதிமன்றம்: ”திருநெல்வேலி நீதிமன்றத்திற்கருகே கொலை” காரணம் என்ன?

 

இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், ●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு

●சிவகங்கையில் தாயின்கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை

●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில்5 பேருக்கு கத்திக்குத்து.

தனிப்பட்ட கொலைகள்"என்று இன்னும் எத்தனை நாட்கள்தான்  திமுக அரசுசட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Embed widget