மேலும் அறிய

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. பணிகள் முடிவடைந்த பிறகே தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அஞ்சல் துறையினர், நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த தபால் நிலையம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிளுக்கு மட்டுமின்றி, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அஞ்சல் சேவையை வழங்கி வந்தது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தான் தபால் பைகள் அனுப்பப்படுகின்றன. அதுபோல வெளியூர்களில் இருந்து வரும் தபால் பைகள் இந்த பேருந்து நிலையத்தில் தான் பெறப்படுகின்றன. எனவே, இந்த பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் முக்கியமானதாக இருந்து வந்தது.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இங்கு செயல்பட்டு வந்த தபால் நிலையம் தற்காலிக ஏற்பாடாக தூத்துக்குடி மேலூர் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலைய கட்டுமான பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை உறுதி அளிக்கப்படவில்லை.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

மேலும், இதுதொடர்பாக அஞ்சல் துறை சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

இதுதொடர்பாக எம்பவர் இந்தியா சமுக சேவை அமைப்பின் கவுரவ செயலாளர் சங்கர் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தின் புதிய கட்டிடத்தில் தபால் நிலையம் மீண்டும் செயல்பட போதிய இடம் ஒதுக்கி தருமாறு வேண்டுகிறேன். கடந்த 1970 முதல் அங்கு செயல்பட்டு வந்த தபால் நிலையத்துக்கு தற்போது மாநகராட்சி இடம் ஒதுக்காமல் உள்ளதாக கேள்விப்படுகிறோம். இது குறித்து அஞ்சல் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தான் தபால் பைகள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து  வரும் பைகளும் இங்கு தான் பெறப்படுகின்றன. மேலும் அஞ்சலகம் தொடர்பான அனைத்து பணிகளும் இங்கே நடைபெற்று வந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே, மீண்டும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தின் புதிய கட்டிடத்தில் தபால் அலுவலகம் செயல்பட ஆவண செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. பணிகள் முடிவடைந்த பிறகே கடைகள், வணிக நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அப்போது தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget