மேலும் அறிய

தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி

பாளையங்கோட்டை சாலையாக துவங்கி தமிழ் சாலையாக நிறைவடையும் பிரதான சாலையில் தேங்கியுள்ள மணலால் புழுதி புயல் வீசாத குறைதான்

தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். துவக்கி வைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை காவல்துறை ஆணையரகம் அமைக்கப்படாத நிலை உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 இலட்சமாக இருந்து உள்ளது. 


தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி தொழில் வளம் மிகுந்த நகரம் ஆகும். இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது, 857 தெருக்கள், சுமார் 174.770 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்து இருந்தன. இதில் 11.798 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலைகள், 111.87 கிலோ மீட்டர் நீள தார் சாலைகள், 18.668 கிலோ மீட்டர் நீள கல்தளம், 32.434 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் இருந்தன. இந்த சாலைகள் பெரும்பாலும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தற்போது பல சாலைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றன.


தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரையண்ட் நகர் பிரதான சாலை, ஜெயராஜ் சாலை, தேவர்புரம் சாலை,வி.இ.சாலை,அண்ணாநகர் பிரதான சாலை புதிதாக கான்க்ரீட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் பிரையண்ட் நகர் பகுதியில் இன்னும் நிறைவடையவில்லை.


தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பது சாலையில் தேங்கியுள்ள மணல் மேடுகள் தான், சிறிது காற்று அடித்தாலும் வீசியடிக்கும் மணல் காரணமாக வாகனங்களை ஒட்ட இயலாத நிலையே உள்ளது. குறிப்பாக பாளையங்கோட்டை சாலையாக துவங்கி தமிழ் சாலையாக நிறைவடையும் பிரதான சாலையில் தேங்கியுள்ள மணலால் புழுதி புயல் வீசாத குறைதான் என்கின்றனர் வாகனஒட்டிகள். சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களாலும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குவதும் உண்டு. சிதம்பரநகர் பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, போல் பேட்டை பிரதான சாலை என பல சாலைகளிலும் மண் மேடுகளுக்கு பஞ்சமில்லை.



தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக சென்ற தகவலை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக களத்தில் இறங்கி மண் மேடுகளை அகற்றும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளார். தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை, அண்ணாநகர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கி இருக்கும் மணம் மேடுகளை அகற்றும் பணியினை நேரடியாக களத்தில் நின்று பார்வையிட்டார். தொடர்ச்சியாக  சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யவும் உத்தரவிட்டார்.


தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி துறைமுக சாலையில் தேங்கும் மண் உள்ளிட்டவைகளை துறைமுக நிர்வாகம் இராட்சத இயந்திரம் மூலம் சுத்தப்படுத்துவது வழக்கம், அதே போன்று இராட்சத இயந்திரம் மூலம் மாநகர் சாலைகளில் தேங்கும் .மண் மேடுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றலாம் எனக்கூறும் பொதுமக்கள்,மாநகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக மணல் மேடுகளை அகற்றும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் தூத்துக்குடி பொதுமக்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget