மேலும் அறிய

கடையம் அருகே கடித்து குதறப்பட்டு உயிரிழந்த நாய்..ஊருக்குள் சிறுத்தை புகுந்ததா? - அச்சத்தில் மக்கள்

சிறுத்தை ஊருக்குள் வந்து நாயை கடித்து குதறிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

தென்காசி மாவட்டம் கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, பிளா, உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்துகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி ஒருவரை கரடி ஒன்று சரமாரியாக கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த விவசாயி ஒருவரையும் முகம் தெரியாத அளவிற்கு சிதைத்தது. பின்னர் அந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றனர். அளவுக்கு அதிகமான மருந்தை செலுத்தியதால் கரடி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக பொத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் முருகன் (வயது 48), தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். விவசாயம் செய்து வருவதால் காவலுக்காக நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் அருகிலுள்ள வேப்ப மரத்தில் நாயை கட்டி போட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். தொடர்ந்து இன்று அதிகாலையில் நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது நாய் கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. நாயின் முகத்தை தவிர வயிறு உள்ளிட்ட பாகங்கள் கடித்து குதறப்பட்டு குடல் வெளியே வந்த  நிலையில் இறந்து கிடந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து இறங்கிய சிறுத்தை முருகன் வீட்டில் கட்டி போட்டிருந்த நாயை கடித்து குதறி தின்றுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் தகவலறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சிறுத்தையின் கால் தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் முருகன் குடும்பத்தினர் சிறுத்தை வந்ததாக கூறியுள்ளனர். நாய் கடித்து குதறப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுது சிறுத்தை வந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டிருப்பதோடு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்காசி அருகே சிறுத்தை ஊருக்குள் வந்து நாயை கடித்து குதறிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் வன விலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget